Sunday, June 26, 2016

குறிப்பு: இக் கதை "தமிழ் பட்டறை" என்ற முகநூல் குழுமத்தில் நடத்தப்பட்ட"புதினம் பகுதி/ எழுத்தாளர் ஆகலாம் வாங்க” எனற போட்டிக்காக எழுதப்பட்டது. கொட்டை எழுத்தில் உள்ளவை அவர்கள் கொடுத்தது, கதையை நாம் எழுத வேண்டும்.

காயத்ரி பர்னிச்சர்ஸ் கம்பெனியின் முதலாளி இராமநாதனின் ஒரே மகளான காயத்ரியின் திருமணம் ஒரு வாரத்திற்கும் முன்னதாகவே கலை கட்டியிருந்தது. தாம்பூலமாக என்ன தரலாம் என ஒவ்வொருவரும் ஒன்றை பட்டியலிட்டனர்… இராமநாதன் ஒரு கம்பெனியின் முதலாளி; பல சங்கங்களில் உறுப்பினர்; அதில் ஒன்று எஃஸ்னோரா சங்கம். எஃஸ்னோரா சங்கம், மக்களிடையே கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை எற்படுத்தும் முயற்சியை அறிந்திருந்தார்.

நம் வீடு சுத்தமாக இருந்தால் மட்டும் போத்தாது நாம் வசிக்கும் சுற்றுச் சூழலும் சுத்தமாக இருக்கு வேண்டும் என்ற எண்ணத்தை தன் மகள் திருமணத்திற்கு வரும் சொந்த பந்தங்கள் மனங்களில் விதைக்க சிறு முயற்சி மேற்கொண்டார்.

தாம்பூலம் கொடுக்கும் இடத்தில் ஒன்ற்றை அடி பச்சை மற்றும் சிவப்பு பிளாஸ்டிக் தொட்டிகளை அடுக்கி வைத்தார். பச்சைத் தொட்டியில் “மக்கும் குப்பை” என்றும் சிவப்புத் தொட்டியில் “மக்காத குப்பை” என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் “மக்கும் குப்பை”யை உரமாக்குவது எப்படி; “மக்காத குப்பை”யை பணமாக்குவது எப்படி என்ற தகவல்கள் அடங்கிய “குப்பை மேலாண்மை” குறித்த சிறு புத்தகத்தையும் வைத்திருந்தார்.

திருமணம் முடிந்ததும், தாம்பூலம் பெற வந்தவர்களுக்கு தாம்புலத்துடன் ஒரு பச்சை மற்றும் சிவப்பு தொட்டிகளுடன் “குப்பை மேலாண்மை” புத்தகத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.

குப்பைகளால் சுற்றுச் சூழல் மாசுபடாதிருக்க தன்னால் இயன்ற அளவு சிறு முயற்சி செய்த மன மகிழ்ச்சியோடு மகளின் திருமணத்தை நடத்தி முடித்தார்.

-ச.சுதாகர்


Saturday, June 18, 2016

“குறிச்சி டைம்ஸ்” எனற பத்திரிக்கையில் எனது “இன்பக் குளியல்” என்ற கவிதை வெளியாகியுள்ளது.

இனிக்கும் இன்ப குளியல்
இனிது இயற்கை குளியல்
குளம், ஏரிக் குளியல்,
உளம் விரும்பும் குளியல்;
உள்ளங் கால் தொட்டதும்,
உள்ளம் உடம்புள் துள்ளும்;
உடல் முழுதும் சிலிர்க்கும்;
உடல் நீரில் மூழ்க,
பற்கள் வாத்திய மாக
ராக மொன்று பிறக்கும்;
இழுத்து பிடித்த உணர்வை,
ஓடை இழுத்துக் கொண்டு
ஓடும்; குழந்தை மனம்
ஓங்கும், அக்கம் பக்கம்
மறக்கும், பரவசம் பிறக்கும்;
நீரில் உள்ள வரை
நிலைக்கும், நிலை குலைய
வைக்கும்; உடல் மிதக்கும்
வரை உள்ள சுகம்
நீர்த் தரும்பிர சாதம்;
குல தெய்வ கோயில்
குரு தெய்வ கோயில்
குளத்தில் குளிக்கும் போது
மட்டும் கிட்டும் சுகம்ஆன் மசுகமே..!

ஏரி குளம் குட்டை யெலாம்
வீட்டைக் கட்டி வைக்க
வரும் அடுத்த வம்சம்
இயற்கை குளியல் சுகிக் காதே..!

அழுக் கை நீக்க குளியல்
மட்டு மல்ல குளித்தல்
நீர்ப்பி ராணன் எடுப்பதும்
சூர்ய சக்தி பிடிப்பதும்
குளித் தலின் நோக்கமே
கதிர் உதிக்கும் முன்னமே
குளிர் நீரில் குளிக்கவே
நீர் ஞாயிறு சக்தி கிட்டுமே..!

எவ் வூர் தண்ணி யிலும்
எப் பருவ மானா லும்
முதல் மூன்று முறை உள்ளங
கையில் நீரள்ளி நிதான மாய்
உதடால் உரிஞ்சி யுரிஞ்சி குடிக்க
உடமபு நீரை சோதிக் கத்தக்க
நோய் எதிர்ப்பு உண்டாக் கப்பின்
முங்கி முங்கி நாள் முழுதும்
குளித்தா லும்ஊ றொன்று நேரா
வுடபிற் கேயிது முன்னோர் வாக்கே..!
-சுதாகர்


Thursday, June 16, 2016

என் மனச்சிறையில்

மனஅழுத்தம் இல்லா மாணவப் பருவம்;
தினம் மகிழ்ச்சி பொங்கும் பள்ளிப்பருவம்;
எத்தனை பேருக்கு வாய்த் திருக்குமோ..!
அத்தனை பேரும் பாக்கிய வான்களே..! .

பாடம் ஒன்று பிள்ளைகள் பத்தைந்து;
பேதம் உண்டு பிள்ளைகள் குணத்து;
புரிதல் சக்தி சுரப்பிகள் பொறுத்து;
பழவினை பொறுத்து சுரப்பிகள் அமைபே..!

கற்பூர புத்தி எல்லார்க்கும் இல்லை;
கற்ப்பிக்கும் யுக்தி தனித்தனி இல்லை;
பொதுவாக போதித்து புரியாமல் படித்து,
போனது தனித் திறன் வெளிப்படாமலே..!

ஆசனம் பழகி, அறியாமை நீக்கி,
ஆசான் அககறை அனைவருக்கும் காட்டி,
அவரவர் தனித்திறன் கண்டு வளர்த்து,
அவனியில் அவரவர் தனியிடம் பெறவே...

கல்வி அமைப்பு அன்றில்லை;
கண்ணி வாய்ப்பு அன்றில்லை;
நம்குழந்தைக்கு அந்தக் குறையில்லை;
நற்காலம் கண்டு மனம்மகிழுதே..!

மனஅழுத்தமிலா மாணவப்பருவம் அமையவே
மனம் காணும் கனவிதுவே..!
-ச.சுதாகர்

2 என் மனச்சிறையில்

மனஅழுத்தம் இல்லா மாணவப் பருவம்;
தினம் மகிழ்ச்சி பொங்கும் பள்ளிப்பருவம்;
எத்தனை பேருக்கு வாய்த் திருக்குமோ..!
அத்தனை பேரும் பாக்கிய வான்களே..! .

அன்று பணமீட்ட படித்தோம் படிப்பு;
இன்று பெற்றவர் விருப்பம் திணிப்பு;
என்றுபெறும் மாணவன் விருப்பம் மதிப்பு;
அன்று மலரும் மகிழ்ச்சி சமுகமே..!

பாடச் சுமையும், இயந்திர வாழ்வும்,
பாசப் பரிவு, பற்றாக் குறையும்,
பிள்ளைக்கு தந்தது மன அழுத்தமே..!
வடிகால் தேடும் மனமாய்ப் போனதே..!

மடியில் அமர்த்தி புத்தி சொல்ல,
மனதிற் கிதமாய் அன்பு பொழிய,
கூட்டுக் குடும்பம் இன்றில்லையே..!

கூட்டுக் குடும்பம் மன அழுத்தம் அழித்தது;
கூட்டுக் குடும்பம் பண மயக்கத்தில் சிதைந்தது;
தீயோர் கூட்டம் சமயம் பார்த்து, திட்டம்
தீட்டித் தன் வயபடுத்தி, தீயச்சமுகம் உருவாக்குமோ..?

விளையாட்டு மைதானம் கணிணியா..?
விளையாட்டு சுரப்பிகுறை நீக்குமே,
விளையாட்டு கூடிவாழப் பழக்குமே,
விளையாட்டில் பள்ளிகவனம் செலுத்தட்டுமே..!

மனஅழுத்தமிலா மாணவப்பருவம் அமையவே
மனம் காணும் கனவிதுவே..!
-ச.சுதாகர்


Monday, May 9, 2016

உழைப்பே உன்னதம்

குறிப்பு: இக் கவிதை "தினமணி" வலைத்தளத்தில் "கவிதை மணி" எனற பகுதியில் வெளியானது.,

உழைப்பே வாழ்வின் உன்னதம்
உழைப்புக்கு உண்டு ஊதியம் ;

ஊக்கத்துடன் முயற்சி செய்,
ஊரும் எறும்பாய் வாழ்;
ஊழ் விலகும் பார்..!

ஊசி முனையும் மைதானம்,
ஊசி காதும் ஆகாயம்,
உறுதி யுள்ளம் உடையோர்க்கே..!

உள்ளச் சோர்வு உதறு
உள்ளம் தளரும் நேரம்
உறுதுணை பகவன் பாதம்

உனக்கும் ஒருநாள் விடியும்.
ஊரே உன்பெயர் சொல்லும்
உலகம் முழுதும் கேட்கும்


Saturday, May 7, 2016

வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!

06/05/2016
இன்றைய ‪#‎சிறந்த‬ _படக்கவிதைப் போட்டியின் வெற்றியாளர். சந்தானம் சுதாகர் அவர்களுக்கும்
பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வர்ணம் பூசிய வாழ்க்கையடா;
யாரை நம்பிப் பழகிடடா..!
சர்க்கரை பூசிய வார்த்தைகளால்,
சாதிக்க எண்ணும் மனிதரடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
பார்வையில் யாரும் பால்போலே,
பாசம் கொள்வது பாசாங்கடா..!
துர்மனம் ஏந்திய துட்டன்கோடி,
கடவுள் உன்துணை கவலைவிடடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வள்ர்ச்சி பொறுக்கா நட்புக்கள்,
வீழ்த்த சமயம் பார்க்கும் சகுனிகள்..!
வாழும் சமுகம் இதிலே… இறைவா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
தெரிந்தே துரோகம் செய்து
துளியும் கருணையின்றி பழகம்,
துட்ட மனங்கள் இடையே, இறைவா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
. சந்தானம் சுதாகர்

Friday, May 6, 2016

“மரம் பேசுகிறேன்”

குறிப்பு:” மரம் பேசிகிறேன்” என்ற இக்கவிதை ‘கவிதைப் பட்டறை’ யின் கவிதைப் போட்டியில் பாராட்டப் பட்ட பத்து கவிதைகளில் இடம் பெற்றுள்ளது.

கதிரொளியை உணவாக்கும் திறம் கொண்ட மரம் பேசுகிறேன், கொஞ்சம் கேள்..!
உணவு வலையின் அங்கமே,
குளிர் நிழலுக் கொதுங்கிய மனிதனே..!

உன் தேவை; ஆசை; அடையும்
குறியில் செயல்படும் மனிதா, புவி
இயற்கை சம நிலை இழக்கும்
நிலைவரும், உன் செயலாலே..!

இயற்கையில் எதுவும் இயல்பில் இயங்கும்
இயற்கையின் இயல்பு சமநிலை காப்பது.
ஒன்றை யொன்றுத் உணவாய்த் திண்று
உணவுச் சங்கிலி உடையா வண்ணம்
வனத்தின் உயிர்கள் சமநிலை காக்கும்.
பசியின்றி உண்ணும்; உணர்வால் இயங்கும்;
மனிதப் பெருக்கம் சமநிலை குலைக்கும்.

இயற்கையில் எதுவும் அளவுக் கதிகம்
பெறுக்கம் கொண்டால் உண்வுச் சங்கிலி
யுடைப்டும்; விளைவு, இயற்கைச் சீறறம்
படை யெடுக்கும்; சமநிலை தனனை
நிலை நாட்டும்; விதி இதுவே..!

காடு, பூமித் தாயின் நுரையீரல்..!
புற்றுநோய்க் கிருமிகள் போல்
அரிக்கிறீர்களே பூமித் தாயிக்கு
வைத்தியம் பார்ப்பது யாரே..? யாரே..?.

இயற்கைச் சமநிலை கெடுப்பதும் நீயே..!
உணவுச் சங்கிலி உடைப்பதும் நீயே..!
பணத்தோடு வாழ்ந்து பழகிய மனிதா
மரத்தோடு வாழக் கொஞ்சம் பழகு.
வரும் சங்கதிகள் உன்போல் நிழல்
பெறச், செல்லும் போது சிந்திப்பாயே..!
-ச.சுதாகர்.


Saturday, April 16, 2016

விடா முயற்சி

புகைப்படத்திற்கு எழுதிய கவிதை

ஊக்கத்துடன் முயற்சி செய்,
ஊதியம் உண்டு உழைப்புக்கு;
ஊரும் எறும்பாய் வாழ்;
ஊசி முனையும் மைதானம்,
ஊசி காதும் ஆகாயம்,
உறுதி யுள்ளம் உடையோர்க்கே..!

உள்ளச் சோர்வு உதறு
உள்ளம் தளரும் நேரம்
உறுதுணை பகவன் பாதம்
உனக்கும் ஒருநாள் விடியும்.
ஊரே உன்பெயர் சொல்லும்
உலகம் முழுதும் கேட்கும்


Thursday, April 14, 2016

துரோகம்


வர்ணம் பூசிய வாழ்க்கையடா;
யாரை நம்பிப் பழகிடடா..!
சர்க்கரை பூசிய வார்த்தைகளால்,
சாதிக்க எண்ணும் மனிதரடா..!
பார்வையில் யாரும் பால்போலே,
பாசம் கொள்வது பாசாங்கடா..!
துர்மனம் ஏந்திய துட்டன்கோடி,
கடவுள் உன்துணை கவலைவிடடா..!

துரோகி துடிக்கவே துயர் செய்யத் துணிந்தேன்; துயர் செய்த
துரோகி யழிக்கவே வெறி கொண்டு திரிந்தேன்; வலி கொண்ட
விரோதி யொழிக்கவே துணை யின்றி தவித்தேன்; மனம் வெம்ப
விரோதி முடிக்கவே இறை பற்றி யழுதேன்; இனி வெற்றியே..!
-சுதாகர்


Wednesday, April 13, 2016

மழலை


எந்தன் செவ் விதழ் ரோசாவே
எந்தன் வாழ்வின் நோக்கமே
உந்தன் வினைகள் தீர்க்கவே
எந்தன் வீட்டில் பிறந்தாயே
எந்தன் வரமாய் வந்தாயே..!

பஞ்ச பூதம் பிசைந்து,
பகவான் படைத்தப் பிராசாதமே!
குலந் தழைக்க, குல
தெய்வம் தந்த விழுதே..!

முளைக்கையில் மணக்கும் துளசியே,
குளிரில் உதரும் உடல்போல்,
கைகால் அதிர்வில் தெய்வநடனமே..!

ஈறின் சிரிப்பில் ஈரம்
சுரக்கும் கல் நெஞ்சிலே,
விரல் பட்டதும் சினுங்கும்
தொட்டாச் சினுங்கியே.

முயல் போல் மூச்சும்;
குட்டி வாய் திறந்து
கொட்டாவியும்; இதழ் பிதுங்கி
அழுவதும்; உறங்கும் போது
சினுங்களும், சிறு சிறு
மொனங்களும்; இசைப் பாடம்
சொல்லாத ராகங்களே; நீ
விழித் திருக்கும் நேரமெல்லாம்
தேவ லோக நாடகமே..!

உற்று உற்று பார்த்தாலும்
கருவறை விட்ட கன்றதும்,
மனக் கண்ணில் நிற்காத
திருப்பதி பெருமாள் போல்,
கசக்கிக் கசக்கிப் பிழிந்தாலும்
மூளையை, நீ பிறந்த
முதல் நாள் முகம்
ஞாபகம் வர வில்லையே..!
கடவுள் உனை கவசமாய் காகுமே..!


Friday, April 8, 2016

தடைகள் தாண்டி தடம் பதித்திடு..!

புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

தடைகள் தாண்டி தடம் பதித்திடு;
இடர்கள் தாவி இடம் பிடித்திடு;
கெடுப்பவ ரெண்ணம் கெட வுயர்ந்திடு;
இறை துணை யுண்டுத் துணிந்திடு..!
இனி இலக்கு நோக்கிப் புறப்படு,,!
கொடுப்பார் காப்பார் படைத்த்வர் உனனையே..!

எடுத்த காரியம் வெற்றி அடைய
கடக்க வேண்டும் மூன்று ப்டியை
ஏளனம் எதிர்ப்பு ஏற்றுக் கொள்ளல்
உரைத்தது சுவாமி விவேகா னந்தர்
தீரர் அருள்மொழி மனதில் நிறுத்து
தளரா மனதுடன் முயற்சி முடுக்கு
தடைக்கல் யாவும் தவிடா கிடுமே..!

நினைத்த காரியம் முடித்திட பக்தியில்
எடுத்த முயற்சி தடை பட
வைத்த மனிதனோ, சகுனமோ, சூழலோ
தடுத்த கடவுளே! வரப்போகும் இழப்பையே.

விளை வில்லாத செய லில்லை
பலன னில்லாத் பாடி லில்லை
இறைபோ லிங்கொரு துணை யில்லை
பக்தியோடு முயன்ற காரியம் வெற்றியே..!
-சுதாகர்


Thursday, April 7, 2016

வறுமை கொடுமை..!

புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.


என்னடா இது கொடுமை..!
கொடிதடா இவ் வறுமை..!
தடை படா உணவை
கொடப் பாஅ கடவுளே..!

குருத்தும் வறுமையில், பழுத்ததும் வறுமையில்;
கருணைக்கு பஞ்சமா? உணவுக்கு பஞ்சமா?
அவரவர் பார்வையில் பசிநோய் பட்டால்
அவரவர் இயன்றளவு அக்கறை கொண்டால்
அவளச் சமுதாய அளவு குறையுமே..!

பள்ளி செல்லும் பருவம்;
பிள்ளை கவனம் பசி;
பசிக்கு உணவு கொடுக்கும்,
திருடனும் கடவு ளாவானே..!

சுற்றி கொடுமைகள்; எல்லாம் எதனாலே?
வற்றிய வயிறு, நரம்பாத தனாலே;
‘நமக்கென்ன..’ வென்று வலகு வதாலே,
நிக்ழும் கொடுமைகள் நம்மை விடாதே..!

முன்வினைப் பயனாலே பசிநோய் தாக்க,
உணவு மருந்திட்டு பசிநோய் விரட்ட,
நம்மால் இயன்றதை ‘சட்’டெனச் செய்ய,
நல்லவர் படைக்குள் அடைக்கலம் கொடுப்போம்;
திருடர் படைக்குள் இழுக்கும் முன்னரே..!
-சுதாகர்


Wednesday, April 6, 2016

மரம் வளர்ப்போம்


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

வருடச் சுற்றின் விடியல் வசந்தம்
புதுத் துவக்கமும் வசந்தம்;
புதிய புரிதலும் வசந்தம்;
மனத் திருத் தமும் வசந்தமே..!

மண்ணின் கனிம வளம் எடுத்து...
மனித குலம் உண்ண .
மணம் பழம் தந்த ,
மரம் தனை வெட்டத்,
திரியும் மதி கெட்ட,
மனித மனம் தனில்...
வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

இலை மலர் பறிக்க
மறைச்சொ லுண்டு ரைக்க;
மரக் கன்றுகள் நட்டப்,
பின்மரம் தனை வெட்ட,
மனம் தனில் சட்ட,
விதி யொன்று நினைக்க,
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

மனித உடல் வள்ர்க்க,
மரம் தன்னை கொடுக்க,
மரம் குணம் நினைக்க,
மனித மனம் தனில்,
வசந்த காலம் வ்ரு மே..!
-சுதாகர்


Tuesday, April 5, 2016

உழவன் என் தோழன்


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

நீயே என் உயிர்த் தோழன்..!
நீ நான் பழக வில்லை;
ஓர் நாள் உண வில்லை;
உயர் குணம் எழ வில்லை;
உன் நெல் வியிறு செல்ல,
என் குணம் நேர் செல்ல,
உதவி செய்த வகை யிலே,
நீ என் உயிர்த் தோழனே..!

ஏறு வில்லாலே, பயிறு அம்பாலே
பஞ்ச சூரனை
போரில் அழிக்கவே..,
தினம் வயலில்
பாடு படும்
வீரனே! நீ
மனித குலம் காக்கும் தோழனே..!
நீ உலகிற்க்கே வுயிர்த் தோழனே..!
-சுதாகர்


Monday, April 4, 2016

சோதனைகள் பல கடந்து


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

சோதனைகள் பல கடந்து
உயிர் பிழைக்க இயலுமோ
குல தெய்வம் காக்க..!
குரு தெய்வம் காக்கவே..!

எந் நேரம் மரணம்
எனைத் தழுவ நேரும்
என் அறிவால் ஆவது
இனி யொன்று மில்லை
நான் வணங்கும் தெய்வம்
நன்மையைத தான் செய்யும்..!
நிச்சயம் ஏதோ நிகழும்
என் உயிர் பிழைக்கும்..!
மனம் கலங்கி யிருக்க,

கதி யற்று முழிக்க,
இக் கட்டுப் போக்க ,
விதி மாற்றி வைக்க,
கோள் கட்டி யாளும்,
படி அளக்கும் தெய்வம்,
பதம் சரணா கதி..!
-சுதாகர்


Sunday, April 3, 2016

இனி இது தான் எதிர்காலமோ..!


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

இனி இது தான் எதிர்காலமோ..!
பறவையும் விலங்கும்
படத்தில் வாழ
பாலை வனத்தில்
நாம் வாழ
காடழித்து பெற்ற பலன் இதுவே..!

பூமித் தாயின் நுரையிரல் காடு..!
புற்று நோய்க்
கிருமிகள் போல்
நாம் அரித்துக்
கொண்டிருக் கிறோம்.
அன்னைக்கு வைத்தியம் பார்ப்பது யாரே..?.


Tuesday, March 22, 2016

யோகம்

தலையில் கனம்கபம் தரும் மடம்;
மடியில் கனம்மலம் தரும் சினம்;
இடையில் மனம்வலம் தரும் துன்பம்,
விலக நலம்தரும் யோகம் பழக,
நிலவும் வாழ்வில் சுகமே தினமே.


Monday, March 21, 2016

பக்தி

நினைத்த காரியம் முடித்திட பக்தியில்
எடுத்த முயற்சி தடை பட
வைத்த மனிதனோ, சகுனமோ,சூழலோ
தடுத்த கடவுளே! வரப்போகும் இழப்பையே.


Monday, January 18, 2016

புதுமைப் பொங்கல்

தைநாளில் வடக்கு திரும்பும் தினகரா,
விதைத்த நெல்லை வளர்த்து தந்த பகலவா;
அறுத்த நெலலில் பொங்கல் வைத்தோம் விகத்தகா,
தைப்பொங்கல் ருசிக்க கொஞ்சம் இறங்கிவா;
ஆசிதந தருள வேணும் மித்திரா.

விவசாயி நெல்லு பொங்கல் கண்டவா..!
தொழிலாளி புதுமைப் பொங்கல் காணவா..!

கதிராலே அறிவு தூண்டும் கதிரவா,
மண்டைப் பானை யண்ண நெல்ல அழலவா;
அன்பு வடுப்பில் பொங்க வச்சோம் ஆதவா,
நல்லெண்ணம் பொங்குதுப் பார் உண்ணவா;
நல்ல காலம் பொறக்க வருள் செய்யவா.

விவசாயி நெல்லு பொங்கல் கண்டவா..!
தொழிலாளி புதுமைப் பொங்கல் காணவா..!


Monday, January 11, 2016

இனி ஒரு விதி செய்வோம்

அறியாமை மேகம் மறைக்க,
அறிவுச் சூரியன் மங்க,
ஆசை ஆட்டுவித்த ஆன்மாக்கள்,

ஆற்றிய சுயநலச் செயல்கள்,
நல்லோர் நலனை சிதைக்க!
தீயோர் குலத்தை ஒடுக்க,
இனியொரு விதி செவோம்.

கல்வி யாயுதம் செய்வோம்,
காசில் லார்க்கும் தருவோம்;
ஞான தானம் செய்வோம்.

அறியாமை மேகங்கள் அகலும்,
அறிவுச் சூரியன் மின்னும்.
அமைதி எங்கும் நிலவ,
இனி ஒரு விதி செய்வோம்

குறிப்பு:

இக்கவிதை தின மணி இணையதள "கவிதைமணி" என்ற பகுதியில் இந்த வார தலைப்புயில் வெளியானது.