யோகம்-கவிதை


உள்ளது நாற்பது - மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான்.

இன்று நாம்  “மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான்” அருளியஉள்ளது நாற்பது” நூல் பற்றி காண்போம்.

கடந்த கால கசப்பான நிகழ்வுகள், மனசோர்வை உண்டாக்குகின்றன; எதிர்காலம் குறித்த பயம், கவலையை உண்டாக்குகின்றது. இன்பம் என்பது ஓர் எண்ணம்; துன்பம் என்பது ஓர் எண்ணம். எண்ணங்களை மாற்றி வேண்டியதை அடையலாம். எண்ணங்கள் உண்டாகும் இடம் மனம். எண்ணங்களை புரிந்து கொண்டு அவற்றை கையாள  உள்ளது நாற்பது நூல் பேருதவி புரிகின்றது.

மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான் அறிவுறுத்துவதும் கருத்துக்கள் இரண்டுஒன்று நான் யார் என்ற ஆராய்சசி, மற்றோன்று இறைவனிடம் சரணாகதி அல்லது அடைக்கலம் அடைவது. உள்ளது நாற்பது நூல்  இவற்றை விளங்க வைப்பதாக உள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு உரையாடிய அறிஞர்கள் அந்த உரையாடல்களை நூல்களாக வெளியிட்டுள்ளனர். உள்ளது நாற்பது நூலை படிக்கும் போது உண்டாகும் ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள  அந்நூல்கள் உதவியாக இருக்கும்.

மனதில் உண்டாகும் எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால் அவற்றை கவனிப்பதும் கவனிக்காமல் தவிர்ப்பதும் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மனவலிமை தேவை; அம்மன வலிமையை தியானத்தின் மூலம் பெறலாம். சரணாகதி அல்லது அடைக்கலம் என்பது இறைவனிடம் நம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு இறைவன் கவனித்துக் கொள்வார் என்று நம்புவது.

மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான் வாழும் காலத்தில் ஓர் அறிஞர் உள்ளது நாற்பது நூலை படித்துவிட்டு பின்வருமாறு கேட்டார்

"ஐயா தாங்கள் அருளிய உள்ளது நாற்பது நூலை படித்தேன், எனக்கு புரியவில்லை". அதற்கு பெருமான் "மீண்டும் மீண்டும் படியுங்கள் அந்த சொற்கள் எல்லாம் உங்களுக்கு புரிந்துவிடும்" என்றார்.

நாமும் உள்ளது நாற்பது நூலை  படித்து பயன் பெறுவோம்.

நன்றி வணக்கம்..!





"மெய் கண்ட ஞான சபை"




"வள்ளல்  கன்னியப்ப சுவாமிகள்" அவர்களின் குரு பூஜை விழா 12/2/23 (ஞாயிற்று கிழமை) அன்று   வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2வது ஞாயிற்று கிழமை குரு பூஜை விழா கொண்டாடப்படும். 

வேளாங்கண்ணி  மேரி மாத ஆலயம்

வேளாங்கண்ணி ஆதி  மேரி மாத ஆலயம்



வேளாங்கண்ணி புதிய மேரி மாத ஆலயம் 


“மெய்கண்ட ஞான சபை”

 தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள்-அம்பத்தூர்.

வள்ளல் திரு கன்னியப்ப சுவாமிகள்  1902-ம் ஆண்டு ஜனவரி
மாதம் 2-ந்தேதி துரைசாமி முதலியாருக்கும்,தனபாக்கியத்துக்கும்
மகனாக பிறந்தார்சிறு வயதிலேயே இவருக்குள் ஆன்மீகத்தேடல்
மிக அதிகமாக இருந்தது. அடிக்கடி சிவ ஆலயங்களுக்கு சென்று
தன்னை மறந்து தவம் இருந்து அதில் மூழ்கிவிடுவார்.


சென்னை திருவொற்றியூரில் அப்போது பரஞ்சோதி மகான் புகழ்பெற்ற மகானாக திகழ்ந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று கன்னியப்ப சுவாமிகள் சேர்ந்தார். அவருக்கு அடிப்படை பயிற்சிகள் அனைத்தையும் கொடுத்து குண்டலினி யோக கலையையும் பரஞ்சோதி மகான் கற்றுக் கொடுத்தார். பின்பு தீட்சையும் வழங்கினார்.

இதன் காரணமாக மிகச்சிறந்த சித்த புருஷராக திரு கன்னியப்ப சுவாமிகள் மாறினார்.

சிவபெருமான் மீது நிறைய பாடல்களும் பாடினார். அப்பாடல்கள்  இசைப்பாடல்களாக வெளி வந்துள்ளனஉணர்வின் ஒளியும் உன்னுள் உலகமும்’ என்ற மிக சிறப்பான
புத்தகத்தையும் கன்னியப்ப சுவாமிகள் அருளியுள்ளார் 223
பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தின் முதல் 20 பக்கத்தை
படித்தாலே போதும் குண்டலினி பயிற்சியை மிக மிக எளிதாக
எப்படி கற்றுக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.


சாதாரண மனிதர்களைப் போலவே  கன்னியப்ப சுவாமிகள் வாழ்க்கை நடத்தினார். ஆனால் அவருக்குள் ஆன்மீக சக்திகள் அதிகம் இருந்தன. அந்த சக்தியின் துணை கொண்டு அவர் பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தி காட்டினார். நோய்களை குணப்படுத்தினார் . தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிடமும் தினமும் சிவ பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

"மெய் கண்ட ஞான சபை" என்ற சபையை உருவாக்கி குண்டலினி சக்தியை பெறுவது பற்றி மிகவும்  எளிமையாக சொல்லிக் கொடுத்தார்.




1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அவர் பரிபூரணம் அடைந்தார்.

அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள இந்தியன் பேங்க் காலனியில் குருசுவாமி தெருவில் அவரது "மெய்கண்ட ஞான
சபை" உள்ளது அங்கு அவர் ஜீவசமாதி செய்யப்பட்டுள்ளார்.

தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள் உயிரோடு வாழ்ந்த வரை ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை ஆண்டுவிழாவாக கொண்டாடி வந்தார். அவர்ஜீவசமாதி ஆன பிறகு அது குருபூஜையாக நடத்தப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை மெய் கண்ட ஞான சபையில் குருபூஜை நடத்தப்படுகிறதுவருகிற பிப்ரவரி  13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 28-வது ஆண்டு குருபூஜை நடைபெற உள்ளது.அன்று சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அம்பத்தூரில் உள்ள மெய் கண்ட ஞான சபையில் தியானம்
செய்வதற்கு வசதிகள் உள்ளன. குண்டலினி யோக பயிற்சியில்
மேன்மை பெற விரும்புவோர்கள் அங்கு சென்று   தியானித்தால்
கன்னியப்ப சுவாமிகளின் அருள்- வழிகாட்டியாக கிடைக்கும்.

அவரது ஜீவசமாதியை அவரது பேரன் ஞானபிரகாசம் பராமரித்து வருகிறார்.
 98408 12939 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொண்டு 
தகவல்கள் பெறலாம்.

திரு ஞானபிரகாசம் 98408 12939 

 

 

 தவத்திரு வள்ளல் "கன்னியப்ப சுவாமிகள்"-அம்பத்தூர்















____________________________________________________________--________________

யோகாவில் உடலின் நிலைகள்.


யோகாவில் உடலை நான்கு வகையில் வளைக்கலாம். முன்னால் வளைக்கலாம்; பின்னால் வளைக்கலாம்; பக்கவாட்டில் வளைக்கலாம்; இடுப்புக்கு மேல் உடலை வளைக்கலாம். அதாவது, முன்னால் வளையும் ஆசனம், பின்னால் வளையும் ஆசனம், பக்கவாட்டில் வளையும் ஆசனம் ம்ற்றும் உடலை முறுக்கும் ஆசனம்.  இந்த நான்கு வகைகளை வரிசையாக இணைத்தோ, வரிசை மாற்றி இணைத்தோ ஆசனங்கள் பழகலாம். தொடக்கத்தில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பழகுங்கள்; நல்ல தேர்ச்சி பெற்றதும் இணைத்து பழகுங்கள். ஒவ்வொரு முறையும் யோகா பழகும் போது இந்த நான்கு வகைகளில், வகைக்கு ஒரு ஆசனத்தை பழக வேண்டும்.

ஒவ்வொறு அசைவிலும் மூச்சை எவ்வாறு இணைப்பது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பொதுவாக உடல் விரிவடையும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; உடலை சுருக்கும் போது மூச்சை வெளியே விட வேண்டும். ஒரு சில ஆசனங்களுக்கு இது மாறுபடலாம், உங்கள் குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மூச்சை கூடுமான வரை 
மெதுவாகவும் ஆழமாகவும் இழுத்து விட முயலுங்கள். தொடக்கத்தில் கடுமையாக இருக்கும், பழகப் பழக எளிதாகிவிடும். 


யோக ஆசனம் பழகும் நிலைகள்.

யோக ஆசனங்களை மூன்று நிலைகளில் பழகலாம். படுத்த நிலை அல்லது கிடந்த நிலை; அமர்ந்த நிலை; நின்ற நிலை. ஒவ்வொரு நிலையிலும் பலன் வேறுபடும். முழுமையான பலன் நின்ற நிலையிலும், அதைவிட குறைவான பலன் அமர்ந்த நிலையிலும், அதைவிட குறைவான பலன் படுத்த அல்லது கிடந்த நிலையிலும் கிடைக்கும்.

உடல், மனம், எல்லா நாளும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. நாளுக்கு நாள் வேறுபடுகிறது. ஒரு நாள் மனம் ஊக்கத்துடனும், உடல் சுறுசுறுப்புடனும் இருக்கும். அப்படிபட்ட நாளில் நின்ற நிலையில் ஆசனங்களை பழக வேண்டும். சோர்வு தெரியாது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது நின்ற நிலை ஆசனங்கள் பழகுவது மிக மிக நல்லது. உயர் நிலை ஆசனங்கள் பழகும் போது, உடல் நன்றாக வளைந்து கொடுக்கும்,  எளிமையாக இருக்கும். 

சில நாள் மனம் சிறிது தளர்வாக இருக்கும். உடலிலும் சுறுசுறுப்பு சிறிது குறைந்திருக்கும். அப்படி பட்ட நாட்களில் அமர்ந்த நிலையில் ஆசன்ங்கள் பழக வேண்டும். சில நாள் மனம் மிகவும் தளர்வாக இருக்கும், உடலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும், அப்படிபட்ட நாட்களில் படுத்த அல்லது கிடந்த நிலையில் ஆசன்ங்கள் பழக வேண்டும். 

எந்த நிலையிலும் நீங்கள், யோக ஆசனங்கள் பழகிட வகுத்த கால அட்டவனையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உடலும் மனமும் ஒத்துழைக்காத போது அறிவின் துணை கொண்டு செயல் படுங்கள். உங்களுக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்றார் போல் ஆசனங்களை பழங்குங்கள்.

ஒவ்வொறு முறையும் உடலை நான்கு வகையில், அதாவது, முன்னால் வளையும் ஆசனம், பின்னால் வளையும் ஆசனம், பக்கவாட்டில் வளையும் ஆசனம் ம்ற்றும் உடலை முறுக்கும் ஆசனம், இடம் பெற வேண்டும். வாரத்துக்கு ஒரு நாளோ, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, 
மூன்று நாட்களுக்கு ஓரு முறையோ, அன்றாடமோ யோக ஆசனம் பழகும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.

========================================================

பவன முக்தாசனம் – 2 ஆம் நிலை

பவன முக்தாசன்
முதல் நிலையோடு கூடுதலாக சில அசைவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். முதுகு தரையில் நன்றாக படியும் படி படுத்துக்கொள்ளுங்கள். வலது காலை மடக்கி, இடது முட்டி அருகில் வலது பாதத்தை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கைவிரல்களை கோர்த்து, வலது முட்டியை பிடித்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். மூச்சை மெதுவாக வெளியே விட்டுக்கொண்டே, வலது கால் முட்டியை வயிற்றை நோக்கி இழுங்கள்.  மூச்சு முழுவதும் வெளியேறும் வரை இழுங்கள். மூச்சு முழுவதும் வெளியேறிய நிலையில், உங்கள் வலது கால் தொடை, உங்கள் வயிற்றை அழுத்திக் கொண்டிருக்கும்.

அதே நிலையில், மீண்டும் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள. மூச்சை உள்ளே இழுத்து முடித்ததும், மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டு, தரையிலிருந்து தலையை துக்குங்கள்; எவ்வளவு முடியுமோ அவவளவு உயரம் துக்குங்கள். ஒரு நிலைக்கு,  மேல் தரையிலிருந்து  முதுகும் தானாக தூக்கும். மூச்சை வெளியேவிட்டுக் கொண்டே முகத்தை கால் முட்டியை நோக்கி கொண்டுவாறுங்கள். மூட்டியை, மூக்கால் தொட முயலுங்கள். தொடக்கத்தில் இயலாது, ழுத்து பகுதியில் மெல்ல வலிக்கும்; பழகப் பழக சரியாகிவிடும். இவற்றை யெல்லாம் மூச்சை வெளியே விட்டவாறு செய்ய வேண்டும்.

மூச்சு முழுவதும் வெளியேறியதும்,  மீண்டும் மூச்சை மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டே முதலில் முதுகை தரையில் படுக்க வைக்க வேண்டும்; பிறகு தலையை தரையில் படுக்க வைக்க வேண்டும். மூச்சு முழுவதும் வெளியேறிதும்,  கோர்த்த கைகளை தளர்த்தி, வலது காலை விடுவிக்கவும்; கைகளையும் கால்களையும் தரையில் கிடத்தவும். இது ஒரு சுற்று; இவ்வாறு மொத்தம் மூன்று சுற்றுகள் வலது காலில் செய்ய வேண்டும், அதே போல் இடது காலிலும் செய்ய வேண்டும்.

பிறகு,இரண்டு காலக்ளையும் ஒரே நேரத்தில் மடக்கி செய்ய வேண்டும்.. இரண்டு கைகளையும் கோர்த்துக் கொள்ளுங்கள்; இரண்டு  கால்களையும் ஒரே நேரத்தில் மடக்கிக் கொள்ளுங்கள்; கோர்த்த கைகளுக்குள் இரண்டு கால் முட்டிகளையும் கொண்டுவரவும்; மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக்கொள்ளவும். பின்பு மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டே, இரு கைகளையும் மடக்கி, இரண்டு முட்டிகளையும் மெதுவாக வயிற்றை நோக்கி இழுக்கவும். மூச்சு முழுவதும் வெளியேறிய நிலையில், உங்கள் இரு கால் தொடைகளும், உங்கள் வயிற்றை அழுத்திக் கொண்டிருக்கும்; அதே நிலையில், மீண்டும் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள. 

மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டு, தரையிலிருந்து தலையை தூக்குங்கள்; எவ்வளவு முடியுமோ அவவளவு உயரம் தூக்குங்கள். ஒரு நிலைக்கு,  மேல் தரையிலிருந்து  முதுகும் தானாக தூக்கும். மூச்சை வெளியேவிட்டுக் கொண்டே உங்கள் முகத்தை இரு கால் முட்டிகளை நோக்கி கொண்டு செல்ல முயலுங்கள். மூக்கை இரு கால் முட்டிகளுக்கு இடையில் கொண்டு செல்ல முயலுங்கள். தொடக்கத்தில் இயலாது, கழுதது பகுதியில் மெல்ல வலிக்கும்; பழகப் பழக சரியாகிவிடும். இவற்றை யெல்லாம் மூச்சை வெளியே விட்டவாறு செய்ய வேண்டும்.

மூச்சை முழுவதும் வெளியே விட்டதும்.  மீண்டும் மூச்சை மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டே முதலில் முதுகை தரையில் படுக்க வைக்க வேண்டும்; பிறகு தலையை தரையில் படுக்க வைக்க வேண்டும். பின்பு மூச்சை வெளியே விட்டுக்கொண்டே, கோர்த்த கைகளை தளர்த்தி, இரு கால் முட்டிகளையும் விடுவிக்கவும்; கைகளையும் கால்களையும் தரையில் கிடத்தவும். இது ஒரு சுற்று; இவ்வாறு மொத்தம் மூன்று சுற்றுகள் செய்ய வேண்டும், இது தான் முழுமையான பவன முக்த ஆசனம்.

படுத்த நிலையில் கண்களை மூடி உடலை கவனிக்கவும். மூச்சு ஓட்டத்தை கவனியுங்கள்; எண்ண ஓட்டத்தை கவனியுங்கள்; இதய துடிப்பை கவனியுங்கள்; வயிறு ஏறி இறங்குவதை கவனியுங்கள்; உடலில் எந்த இடத்தில் அழுத்தம் இருக்கிறது என்று கவனியுங்கள்; பவன முக்க ஆசனம் செய்யதை நினைத்துப் பாருங்கள்; எந்த நிலையில் மூச்சு திணறல் எற்பட்டது, உடலில் நடுக்கம் எற்பட்டது, என்றெல்லாம் நினைத்துப் பாருங்கள். இரண்டு, மூன்று நிமிடம் கழித்து வேறு ஆசனம் செய்ய துவங்குகள்.      

===================================================
யோகா பழகும் முறை:

உணவு உண்ட பின், குறைந்தது நான்கு மணி நேரம் கழித்து யோக ஆசனங்கள் பழக வேண்டும். யோக ஆசனங்கள் பழகும் போது உடல் நடுங்கக் கூடாது, தடுமாற்றம் இருக்கக் கூடாது. மூச்சு வேக வேகமாக ஓடக் கூடாது. கூடுமானவரை இயல்பாக மூச்சு விட முயலுங்கள். இருதயம் படபடக்கக் கூடாது.

யோக ஆசனங்கள் பழகுவதற்கு முன்பு, உங்களுக்கு விருப்பமான இறைவனை வணங்குங்கள். பின்பு சொல்லிக் கொடுத்த் குருவை வண்ங்கவும். பின்பு, மூன்று மூறை மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நன்றாக வெளியே விடவும்.  மனதை ஒருமுகப் படுத்துங்கள்.   இன்று என்னென்ன ஆசனங்கள் பழக வேண்டும் என்பதை மனதில் வரிசை படுத்திக் கொள்ளுங்கள்.

தொடக்கத்தில் மெதுவாக பழகுங்கள்.ஒரு ஆசனத்திற்கும் அடுத்த ஆசனத்திற்கும் இடையே, கால்களை, கைகளை நீட்டி, பரப்பி , முதுகு தரையில் நன்றாக படும்படி படுத்து,  ஓய்வு எடுங்கள்.  உங்கள் கவனம் முழுதும் உடல் மீதே இருக்கட்டும்.


யோகாவில் நேரம்:

யோகாவில், நேரத்தை, மூச்சைக் கொண்டு கணக்கிடுகிறார்கள். ஒரு முறை  மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் நேரத்தை ஒரு மூச்சு எனக் கணக்கிடுகிறார்கள். யோக ஆசனம் பழங்கும் போது, ஆசனத்தின் ஒரு நிலையை  அடைந்ததும், அந்த நிலையில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை மூச்சை கொண்டு கணக்கிடுகிறார்கள். ஒரு மூச்சு, இரண்டு மூச்சு, மூன்று மூச்சு என்று.
----------------------------------------------------------------------------------------------

பவன முக்தாசனம்.

பவனம் என்றால் காற்று; முக்தா என்றால் விடுதலை. பவன முக்தாசனம் என்றால் காற்று விடுக்கும் ஆசனம் என்று பொருள். இந்த ஆசனம் பழகுவதால் உண்டாடும் பலங்கள்:

பலங்கள்-

Ø  வயிற்றில் இருக்கும் தேவையற்ற காற்று வெளியேரும்.
Ø  மலம் நன்றாக வெளியேறும்.
Ø  தொப்பை குறையும்.
Ø  செரிமானம் நன்றாக இருக்கும்;  
Ø  பசி எடுக்கும்;
Ø  வயிற்று பொறுமல் அகலும்.
Ø  உடல் சுறுசுறுப் படையும்;
Ø  மன அழுத்தம் குறையும்;
Ø  எண்ணங்கள் தெளிவாகும்;
Ø  மலக்குடலில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
Ø  இடுப்பு மூட்டுக்கள் தளர்வடையும், இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்,

செய்முறை.

கால்களை நீட்டி, முதுகு தரையில் நன்றாக பதியும்படி படுத்துக்கொள்ளவும். மூன்றிலிருந்து ஆறு முறை மூச்சை நன்றாக இழுத்து விடவும். பின்பு மூச்சு ஓட்டத்தை கவனிக்கவும்.

இப்போது, வலது காலை மடக்கி, வலது கால் பாதத்தை  இடது மூட்டிக்கு அருகில் வைத்துக்கொள்ளவும். இரு கை விரல்களையும் கோர்த்து, வலது மூட்டியைப் பிடித்துக் கொள்ளவும். முதுகு தரையில் ஒட்டி இருக்க வேண்டும். உங்கள் கைகளுக்கு முட்டி எட்டவில்லை என்றால், காலை சற்று உயர்த்தி, மூட்டி கைகளுகுள் வரும்படி செய்துகொள்ளுங்கள்.

மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், மெல்ல மூச்சை விட்டுக்கொண்டே கைகளால் வலது மூட்டியை வயிற்றை நோக்கி இழுக்கவும். மூச்சு முழுவதும் வெளியேறும் வரை, காலை வயிற்றின் அருகில் கொண்டுவர முயலுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டும் வயிற்றின் அருகில் கொண்டுவரவும். பின்பு தானாக மூச்சு உள்ளே இழுக்கப்படும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கும் போது வலது காலை மெல்ல, விடுவித்து பழைய நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள்.

முழுவதும் மூச்சை உள்ளே இழுத்த்தும், மீண்டும் மூச்சை வெளியே விட்டவாறு வலது கால் மூட்டியை வயிற்றின் அருகில் கொண்டுவர முயலுங்கள்; முடிந்த வரை வயிற்றின் அருகில் கொண்டுவாருங்கள். மூச்சு முழுவதும் வெளியேறியதும், மூச்சு தானாக உள்ளிழுக்கப்படும். மூச்சை உள்ளிழுத்தவாறு மெல்ல கால்களை விடுவித்து, பழைய நிலைக்கு எடுத்துச்செல்லவும். இவ்வாறு மூன்று மூறை செய்யவும். முடிந்ததும் வலது காலை தரையில் நீட்டி ஓய்வு எடுக்கவும்.

இப்போது  இடது காலை மடக்கி, மூன்று முறை, மேற்சொன்ன வகையில் செய்யவும். முடித்ததும் சிறிது ஓய்வு எடுக்கவும்.

அடுத்து, இரு கைவிரல்களையும் கோர்த்து  இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் மடக்கி பிடித்துக் கொண்டு, மூச்சை நனறாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பின்பு மூச்சை விட்ட வாறு இரு கால் மூட்டிகளையும் வயிற்றை நோக்கி இழுக்க வேண்டும்.  மூச்சு முழுவதும் வெளி விட்ட பின்பு, மூச்சு தானாக உள்ளே இழுக்கப்படும். மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே இரு கைகளையும் மெல்ல தளர்த்தி, கால் முட்டிகளை பழைய நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள். இவ்வாறு மூன்று மூறை செய்யுங்கள். 

பின்பு கால்களை தரையில் நீட்டி, உள்ளங்கைகள் விட்டம் நோக்கி இருக்கும் படி வைத்து  ஓய்வு எடுங்கள்.
  


=========================================================
நேற்று( 10-2-2019 ), சென்னை அம்பத்தூரில் உள்ள ஞானமூத்தி நகரில்,   தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள் அவர்களின்25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 59வது ஆண்டு விழா, சிறப்பாக இனிதே நடந்து முடிந்தது.




புரிதல்
தலையால் தரையில் சற்று நேரம் நின்றேன்
தலைகீழாய் கண்டேன் சகலமுமே புதிய புரிதல்

No comments:

Post a Comment