Thursday, June 16, 2016

என் மனச்சிறையில்

மனஅழுத்தம் இல்லா மாணவப் பருவம்;
தினம் மகிழ்ச்சி பொங்கும் பள்ளிப்பருவம்;
எத்தனை பேருக்கு வாய்த் திருக்குமோ..!
அத்தனை பேரும் பாக்கிய வான்களே..! .

பாடம் ஒன்று பிள்ளைகள் பத்தைந்து;
பேதம் உண்டு பிள்ளைகள் குணத்து;
புரிதல் சக்தி சுரப்பிகள் பொறுத்து;
பழவினை பொறுத்து சுரப்பிகள் அமைபே..!

கற்பூர புத்தி எல்லார்க்கும் இல்லை;
கற்ப்பிக்கும் யுக்தி தனித்தனி இல்லை;
பொதுவாக போதித்து புரியாமல் படித்து,
போனது தனித் திறன் வெளிப்படாமலே..!

ஆசனம் பழகி, அறியாமை நீக்கி,
ஆசான் அககறை அனைவருக்கும் காட்டி,
அவரவர் தனித்திறன் கண்டு வளர்த்து,
அவனியில் அவரவர் தனியிடம் பெறவே...

கல்வி அமைப்பு அன்றில்லை;
கண்ணி வாய்ப்பு அன்றில்லை;
நம்குழந்தைக்கு அந்தக் குறையில்லை;
நற்காலம் கண்டு மனம்மகிழுதே..!

மனஅழுத்தமிலா மாணவப்பருவம் அமையவே
மனம் காணும் கனவிதுவே..!
-ச.சுதாகர்

2 என் மனச்சிறையில்

மனஅழுத்தம் இல்லா மாணவப் பருவம்;
தினம் மகிழ்ச்சி பொங்கும் பள்ளிப்பருவம்;
எத்தனை பேருக்கு வாய்த் திருக்குமோ..!
அத்தனை பேரும் பாக்கிய வான்களே..! .

அன்று பணமீட்ட படித்தோம் படிப்பு;
இன்று பெற்றவர் விருப்பம் திணிப்பு;
என்றுபெறும் மாணவன் விருப்பம் மதிப்பு;
அன்று மலரும் மகிழ்ச்சி சமுகமே..!

பாடச் சுமையும், இயந்திர வாழ்வும்,
பாசப் பரிவு, பற்றாக் குறையும்,
பிள்ளைக்கு தந்தது மன அழுத்தமே..!
வடிகால் தேடும் மனமாய்ப் போனதே..!

மடியில் அமர்த்தி புத்தி சொல்ல,
மனதிற் கிதமாய் அன்பு பொழிய,
கூட்டுக் குடும்பம் இன்றில்லையே..!

கூட்டுக் குடும்பம் மன அழுத்தம் அழித்தது;
கூட்டுக் குடும்பம் பண மயக்கத்தில் சிதைந்தது;
தீயோர் கூட்டம் சமயம் பார்த்து, திட்டம்
தீட்டித் தன் வயபடுத்தி, தீயச்சமுகம் உருவாக்குமோ..?

விளையாட்டு மைதானம் கணிணியா..?
விளையாட்டு சுரப்பிகுறை நீக்குமே,
விளையாட்டு கூடிவாழப் பழக்குமே,
விளையாட்டில் பள்ளிகவனம் செலுத்தட்டுமே..!

மனஅழுத்தமிலா மாணவப்பருவம் அமையவே
மனம் காணும் கனவிதுவே..!
-ச.சுதாகர்


No comments:

Post a Comment