Saturday, April 16, 2016

விடா முயற்சி

புகைப்படத்திற்கு எழுதிய கவிதை

ஊக்கத்துடன் முயற்சி செய்,
ஊதியம் உண்டு உழைப்புக்கு;
ஊரும் எறும்பாய் வாழ்;
ஊசி முனையும் மைதானம்,
ஊசி காதும் ஆகாயம்,
உறுதி யுள்ளம் உடையோர்க்கே..!

உள்ளச் சோர்வு உதறு
உள்ளம் தளரும் நேரம்
உறுதுணை பகவன் பாதம்
உனக்கும் ஒருநாள் விடியும்.
ஊரே உன்பெயர் சொல்லும்
உலகம் முழுதும் கேட்கும்


No comments:

Post a Comment