Monday, January 18, 2016

புதுமைப் பொங்கல்

தைநாளில் வடக்கு திரும்பும் தினகரா,
விதைத்த நெல்லை வளர்த்து தந்த பகலவா;
அறுத்த நெலலில் பொங்கல் வைத்தோம் விகத்தகா,
தைப்பொங்கல் ருசிக்க கொஞ்சம் இறங்கிவா;
ஆசிதந தருள வேணும் மித்திரா.

விவசாயி நெல்லு பொங்கல் கண்டவா..!
தொழிலாளி புதுமைப் பொங்கல் காணவா..!

கதிராலே அறிவு தூண்டும் கதிரவா,
மண்டைப் பானை யண்ண நெல்ல அழலவா;
அன்பு வடுப்பில் பொங்க வச்சோம் ஆதவா,
நல்லெண்ணம் பொங்குதுப் பார் உண்ணவா;
நல்ல காலம் பொறக்க வருள் செய்யவா.

விவசாயி நெல்லு பொங்கல் கண்டவா..!
தொழிலாளி புதுமைப் பொங்கல் காணவா..!


No comments:

Post a Comment