Wednesday, April 6, 2016

மரம் வளர்ப்போம்


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

வருடச் சுற்றின் விடியல் வசந்தம்
புதுத் துவக்கமும் வசந்தம்;
புதிய புரிதலும் வசந்தம்;
மனத் திருத் தமும் வசந்தமே..!

மண்ணின் கனிம வளம் எடுத்து...
மனித குலம் உண்ண .
மணம் பழம் தந்த ,
மரம் தனை வெட்டத்,
திரியும் மதி கெட்ட,
மனித மனம் தனில்...
வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

இலை மலர் பறிக்க
மறைச்சொ லுண்டு ரைக்க;
மரக் கன்றுகள் நட்டப்,
பின்மரம் தனை வெட்ட,
மனம் தனில் சட்ட,
விதி யொன்று நினைக்க,
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

மனித உடல் வள்ர்க்க,
மரம் தன்னை கொடுக்க,
மரம் குணம் நினைக்க,
மனித மனம் தனில்,
வசந்த காலம் வ்ரு மே..!
-சுதாகர்


No comments:

Post a Comment