Tuesday, October 30, 2018

திருத்தப்பட்ட பாடல்கள்


நான் எழுதிய பாடல்களை  "பைந்தமிழ்ச் சோலை" முகநூல் குழுவில் பதிவிட்டு, பிழையிருந்தால் திருத்துமாறு வேண்டிக்கொண்டேன்.

அதற்க்கேற்ப  "பைந்தமிழ்ச் சோலை" மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ஐயா அவர்களால் நிலைமண்டில ஆசிரியப் பாக்களாக  திருத்தப்பட்டன.

 நான் எழுதியதையும் அவர், திருத்தியதையும் பதிவிடுகிறேன்.

இறை வணக்கம்

மனித வாழ்க்கை வரைபடம் உன்னிடம்,
இனி வருவது யாதென அறிந்திடும்
தெளிவே, ஏதும் தெரியா தவன்
தெளிவாய் சிறப்பாய் செயல்பட அருள்வாய்

திருத்தப்பட்ட பாடல்
இறை வணக்கம்
* * * * * * * ** * * *
மனித வாழ்க்கை வரைபடம் உன்னிடம்,
இனிமேல் வருவது யாதென அறிந்திடும்
தெளிவே, ஏதும் தெரியா தவனைத்
தெளிவாய்ச் சிறப்பாய்ச் செயல்பட அருள்கவே!


 எட்டுநடைப் பயிற்சி
மருந்து பாதி மளிகைப் பாதி
வருந்தி வாங்கும் மனித குலமே
மீளும் வழியும் விளங்கும் செய்தால்
நாளும் எட்டு நடைப் பயிற்சி

திருத்தப்பட்ட பாடல்
எட்டுநடைப் பயிற்சி
* * * * * * * * * * * * * *
மருந்து பாதி மாளிகைப் பாதி
வருந்தி வாங்கும் மனிதக் குலமே
மீளும் வழியும் விளங்கும் செய்க
நாளும் எட்டு நன்னடைப் பயிற்சியே!


மழை
மங்கை யிடம் வயதைக் கேட்டதும்
பொங் கிடும் பொல்லா தகோவம்
போல் மழை பொழிந்தது; திட்டு
போல் முட்டியது பூமியை துளி

திருத்தப்பட்ட பாடல்
மழை
* * * *
மங்கை யிடத்தே வயதைக் கேட்டதும்
பொங்கிய தாலே பொல்லாக் கோவம்
போல்மழை பொங்கிப் பொழிந்தது; திட்டு
போல்முட் டியதே பூமியை துளியே!








Monday, October 29, 2018

மழை


மங்கை யிடம் வயதைக் கேட்டதும்
பொங் கிடும் பொல்லா தகோவம்
போல் மழை பொழிந்தது; திட்டு
போல் முட்டியது பூமியை துளி

எட்டுநடைப் பயிற்சி


மருந்து பாதி மளிகைப் பாதி
வருந்தி வாங்கும் மனித குலமே
மீளும் வழியும் விளங்கும் செய்தால்
நாளும் எட்டு நடைப் பயிற்சி

இறை வணக்கம்



மனித வாழ்க்கை வரைபடம் உன்னிடம்,
இனி வருவது யாதென அறிந்திடும்
தெளிவே, ஏதும் தெரியா தவன்
தெளிவாய் சிறப்பாய் செயல்பட அருள்வாய்


விலங்கு மனிதர்

அகரமுதல இணைய இதழில் வெளியான கவிதை

வலித்திடும், பாசமே வைத்திட அஞ்சிடும்,
வலியது வாழும் வன வாழ்க்கையை
வாழும், விலங்கு மனித உறவுகள்
சூழும், கருணை சுரக்கும் மனமே

Friday, October 26, 2018

காகம் பறந்தது – சந்தானம் சுதாகர்

அகரமுதல இணைய இதழில் வெளியான கவிதை 

http://www.akaramuthala.in/

காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர்


கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும்,
உடன் நடைமாற்றும், ஓட்டம் எடுக்கும்,
பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல்,
இருள்நிறம் இருக்கும், எண்ணம் பொன்னிறம்
கொண்ட, இனத்துடன் கூடியுண்ணும் காகம்
என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும்,
இன்று பறந்தது என்வரவு பார்த்தே!
சந்தானம் சுதாகர்

Monday, October 8, 2018

காகம் பறந்தது




காகம் பறந்தது 
கடன்தான்  கேட்பவர் கண்ணில் பட்டதும்
உடன்தான்  நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும்
பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல்
இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம்
கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம்
என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும்

இன்று பறந்தது என்வரவு பார்த்தே!

Wednesday, October 3, 2018

காகம் பறந்தது


கடன்தான்  கேட்பவர் கண்ணில் பட்டதும்
உடன்தான்  நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும்
பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல்
இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம்
கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம்
என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும்
இன்று பறந்தது என்வரவு பார்த்தே!