Saturday, May 7, 2016

வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!

06/05/2016
இன்றைய ‪#‎சிறந்த‬ _படக்கவிதைப் போட்டியின் வெற்றியாளர். சந்தானம் சுதாகர் அவர்களுக்கும்
பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வர்ணம் பூசிய வாழ்க்கையடா;
யாரை நம்பிப் பழகிடடா..!
சர்க்கரை பூசிய வார்த்தைகளால்,
சாதிக்க எண்ணும் மனிதரடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
பார்வையில் யாரும் பால்போலே,
பாசம் கொள்வது பாசாங்கடா..!
துர்மனம் ஏந்திய துட்டன்கோடி,
கடவுள் உன்துணை கவலைவிடடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வள்ர்ச்சி பொறுக்கா நட்புக்கள்,
வீழ்த்த சமயம் பார்க்கும் சகுனிகள்..!
வாழும் சமுகம் இதிலே… இறைவா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
தெரிந்தே துரோகம் செய்து
துளியும் கருணையின்றி பழகம்,
துட்ட மனங்கள் இடையே, இறைவா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
. சந்தானம் சுதாகர்

2 comments:

  1. மதிப்பிற்குரிய சுரேஷ் அவர்களே..! வருகைக்கு நன்றி..! தங்கள் பாராட்டு ஊக்கமளிக்கிறது..! நன்றி..!

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய சுரேஷ் அவர்களே..! வருகைக்கு நன்றி..! தங்கள் பாராட்டு ஊக்கமளிக்கிறது..! நன்றி..!

    ReplyDelete