Sunday, November 22, 2015

படைத்தவன் ஞாபகம்

இக்கட்டு சுழ்நிலை உருவாகும் சமயம்
திக்கற்று தன்னிலை இழக்கும் தருனம்
படைத்தவன் ஞாபகம் மனத்தில் வந்தால்
நடப்பது எதுவும் நம்கையில் இல்லை;
நாம் வணங்கும் தெய்வம் நமக்கு
நன்மையைத் தான் செய்யும் என்னும்
நம்பிக்கை சுரக்கும், தடுமாற்றம் அகலும்,
புத்தி தெளிந்து, முயற்சி முடுக்கும்,
பிரச்சனைக்கு பிறக்கும் தீர்வு.