Saturday, December 31, 2022


 

Wednesday, August 31, 2022

Friday, June 10, 2022

நெஞ்சமே...

 காக்கை வளர்த்தாலும்  மாறுமோ நெஞ்சமே

கார்குயில் தேன்குரல் என்றைக்குமே**

யாக்கையுடன்  வந்த பண்புமா சீரன்றோ

யாவரும் ஏதோ ஒன்றுள்ளவரே**

இல்லை என்னும் எண்ண மில்லாமல் போகவே

இன்றே நினைப்பில் மாற்றம் செய் நெஞ்சே**

உள்ளதை எண்ணி மகிழ்வோடு  வாழ்கவே

உன்ஆசை எல்லாம் மெய்யாகிடுமே**

பள்ளம் செல்லும்  கலைதான்  எவர்  சொன்னதோ

பள்ளிக்கூடம் சென்று நீர் கற்றதோ**

வல்லவன் யாவிலும் பேறுகாலம் உள்ளே

வைத்து  வையம் படைத்தாரே நெஞ்சே**

வேர்இலை பூகாய் பழம்கைகள்  தூண்டியா

வித்தில் ஒளிந்தது   தென்பட்டதோ**  

நீர் நிலம்  தந்த ஊட்டம்   உருமாற்றமே

நீகொண்ட ஊக்கம் உரம் போன்றதே** 

ஆக்கம் நினைத்தே  கலங்குவதும்  ஏனோ 

ஆசையே ஆக்கும் சூழல் செய்யுமே**

காக்கும் திறன் பொறுத்தே வெற்றி யுள்ளதே

கண்முன் தோன்றும் கனவில்  உள்ளதே**     

Thursday, May 26, 2022

அன்பு

 ஆண்டாண்டாய் வாழ்ந்தும் நீரில் ஒட்டுமோ பாசி...

அன்பின் கனத்தைக்  காலம் காட்டுமோ..!!!