Monday, January 11, 2016

இனி ஒரு விதி செய்வோம்

அறியாமை மேகம் மறைக்க,
அறிவுச் சூரியன் மங்க,
ஆசை ஆட்டுவித்த ஆன்மாக்கள்,

ஆற்றிய சுயநலச் செயல்கள்,
நல்லோர் நலனை சிதைக்க!
தீயோர் குலத்தை ஒடுக்க,
இனியொரு விதி செவோம்.

கல்வி யாயுதம் செய்வோம்,
காசில் லார்க்கும் தருவோம்;
ஞான தானம் செய்வோம்.

அறியாமை மேகங்கள் அகலும்,
அறிவுச் சூரியன் மின்னும்.
அமைதி எங்கும் நிலவ,
இனி ஒரு விதி செய்வோம்

குறிப்பு:

இக்கவிதை தின மணி இணையதள "கவிதைமணி" என்ற பகுதியில் இந்த வார தலைப்புயில் வெளியானது.


No comments:

Post a Comment