Thursday, August 14, 2014

‘எல்லாம் மாற்ற மயம்’

ஐந்து புலன்களும்,
எட்டும் வரை சேகரித்துத் தந்தத் தகவல்களை,
புரிந்து கொண்டு சிந்தித்து முடிவெடுக்கும் நேரத்திற்குள்,
பெற்ற அத்தகவல்கள் மாறிப்போகும் என்னும்
நித்திய உண்மை தெரியாமல் செயல்படும் மனம்,
கிணற்றுத் தவளை போல.
‘எல்லாம் மாற்ற மயம்’
என்பதை புரிந்து கொள்ளாது,
இரை பிடிக்க சிலந்தி பின்னும் வலை போல,
தன் சுயநல ஆசையை தீர்த்துக் கொள்ள,
புலன் அறிவை நம்பி,
அகங்காரத்தோடு செயல் புரிந்து,
மாற்றத்தால் முட்டு பட்டு,
முட்டு நீக்க முயன்று, அது சிக்கலாகி,
அச்செயல் சிக்கலில்,
சிலந்தியே தன் வலையில் சிக்கி கொள்வது போல்
மனம் சிக்கி,
விடுதலையை வெளியே தேடும்,
விடுவிப்பவரை எதிர்நோக்கி ஏங்கி நிற்கும்.
கண்ணுக்கும், காதுக்கும், நாசிக்கும்,
வாயிக்கும், தோலுக்கும்
எட்டாத தூரத்தில் தகவல்கள் இருக்கின்றன.
அவையும் நம் செயகளுக்கு முட்டாக அமையும்.
அந்த எட்டாத அறிவைத் தரும் புலன் பக்தி.
சுயநலத்தை சுத்தப்படுத்தும் தீ.
மனத்தில் ஆண்டவன் ஆட்சி அனுமதித்தால்,
எண்ணத்தில் சுயநலம் சேர்ந்திருந்தாலும், செயலாகும் போது
மாற்றத்தோடு ஒத்து சென்று
மங்காத பலனாக அமையும்.
பக்க விளைவில்லா சித்த வைத்தியம் போல.