Thursday, April 14, 2016

துரோகம்


வர்ணம் பூசிய வாழ்க்கையடா;
யாரை நம்பிப் பழகிடடா..!
சர்க்கரை பூசிய வார்த்தைகளால்,
சாதிக்க எண்ணும் மனிதரடா..!
பார்வையில் யாரும் பால்போலே,
பாசம் கொள்வது பாசாங்கடா..!
துர்மனம் ஏந்திய துட்டன்கோடி,
கடவுள் உன்துணை கவலைவிடடா..!

துரோகி துடிக்கவே துயர் செய்யத் துணிந்தேன்; துயர் செய்த
துரோகி யழிக்கவே வெறி கொண்டு திரிந்தேன்; வலி கொண்ட
விரோதி யொழிக்கவே துணை யின்றி தவித்தேன்; மனம் வெம்ப
விரோதி முடிக்கவே இறை பற்றி யழுதேன்; இனி வெற்றியே..!
-சுதாகர்


No comments:

Post a Comment