பங்குச் சந்தை

பங்கு சந்தை யாருக்கு?

பலருக்கு தேன்  பிடிக்கும்; சிலருக்கு பாகற்காயும் பிடிக்கும்; பாகற்காய் கசக்கும்; ஒருவருக்கு கசப்பு சுவை பிடிக்குமா? இனிப்பு விரும்பிகளுக்கு எழும் ஐயம். இறைவனால் மட்டுமே விடை சொல்லக் கூடிய ஒரு புதிர். இப்படி ஏராளமான புதிர்கள் நம்மை சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றை யெல்லாம் நாம் இயற்கை குணம், இயல்பு குணம் என்று புரிந்து கொள்கிறோம். தேனை விரும்புவர், தேனை சுவைத்து அடையும் மகிழ்ச்சியைத் தான், பாகற்காயை விரும்புபவரும், பாகற்காயை சுவைத்து அடைகிறார்.  ஒருவர் விரும்பி செய்யும்  தொழிலும் இது போன்று தான். அவரவர் இயல்பாற்றல் பொறுத்து தொழிலை செய்கிறார்கள்.  

பணம் கிடைத்தால் பலர் சேமிக்க நினைப்பார்கள்; சிலர் செலவு செய்ய நினைப்பார்கள். இது அவரவர் இயற்கை குணம்; இயல்பு குணம். நம் குணம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளன. பணத்தை பணமாகவே சேமிக்கலாம், பணத்தை பொருளாக மாற்றியும் சேமிக்கலாம். பணத்தை பணமாகவே சேமிப்பது என்பது பணத்தை உண்டியலில் வைத்து சேமிப்பது அல்லது வங்கியில் வைத்து  சேமிப்பது. உண்டியலில் சேமித்தால், பண்ம் பாதுகாப்பாய் இருக்கும்; தேவைக்கு உதவும்; குறையாது; வளராது. வங்கியில் சேமித்தால் பாதுகாப்பாய் இருக்கும்; தேவைக்கு உதவும்; குறையாது; ஆனால் வளரும்.

பணத்தை பொருளாக மாற்றி சேமிப்பது என்பது, பணத்தை தங்கமாகவோ, வெள்ளியாகவோ, வைரமாகவோ, மாற்றி சேமிப்பது. பணத்தை தங்கமாகவோ, வெள்ளியாகவோ, வைரமாகவோ,  மாற்றி சேமித்தால், பாதுகாப்பாய் இருக்கும்; தேவைக்கு உதவும்; ஆனால், மதிப்பு குறையலாம், உயரலாம். காரணம் பொருள் என்றால் அதற்கு ஒரு விலை இருக்கும். விலை என்பது அந்த பொருளின் தேவையைப் பொறுத்து ஏறும் இறங்கும்; அதாவது மாறும். பணத்தை பொருளாக மாற்றி சேமிக்கும் போது, அந்த பொருளின் விலைக்கு ஏற்ப,  நம் சேமிப்புத் தொகையும் எறும், இறங்கும் அதாவது மாறும். அப்படியே இருக்காது.


பணத்தை பொருளாக மாற்றி சேமிக்கும் பொருட்களில் ஒன்று தான் பங்குகள். பங்குகள் கிடைக்குமிடம் பங்கு சந்தை. பணத்தைப் பொருளாக மாற்றி சேமிக்கும் போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு பொருளின் விலை ஏன் ஏறுகிறது, இறங்குகிறது; அதற்கு காரணம் என்ன? எதிர்காலத்தில் விலை ஏறுமா, இறங்குமா..! போன்றவற்றை தெரிந்து கொள்ளும் விருப்பம் இருக்க வேண்டும். ஆய்வு செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும். அப்போது தான் பணத்தை பொருளாக மாற்றி சேமிக்கலாமா, பணத்தை பணமாக சேமிக்கலாமா என்று முடிவெடுக்க முடியும்.

 பணத்தை பணமாகவே சேமிக்க, சேமிக்கும் குணம் மட்டும் போது,. பணத்தை பொருளாக மாற்றி சேமிக்க, சேமிக்கும் குணத்தோடு, துணிவும் வேண்டும். பணத்தை பணமாகவே சேமிக்கும் போது கவலையில்லை. பணத்தை பொருளாக மாற்றி, அதாவது தங்கமாகவோ, வெள்ளியாகவோ, பங்குகளாகவோ,  வைரமாகவோ சேமிக்கும் போது சேமிப்பு பணம் அப்படியே இருக்க வாய்ப்பில்லை.  


பலருக்கு வீரவிளையாட்டை வேடிக்கை பார்க்க பிடிக்கும்; சிலருக்கு வீரவிளையாட்டு விளையாட பிடிக்கும், காரணம், இயற்கை குணம், இயல்பு குணம். உங்களின் இயற்கை குணம். இயல்பு குணம் என்ன? பங்கு சந்தை யாருக்கு? நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.


====================================================


பங்குகளை விற்று வாங்குவது என்றால் என்ன் ?
காலை பத்து மணி; பழக்கமான மளிகை கடை; வழக்கம் போல் மளிகை பொருட்களின் பட்டியலையும், அதற்குரிய பணத்தையும் கடைக்காரரிடம் கொடுக்கிறீர்கள். பட்டியலில் இருந்த  பல பொருட்கள், அப்போது, அவர் கடையில் இல்லை; அதற்காக நம்மை பிறகு வாருங்கள் என்று திருப்பி அனுப்பமாட்டார். வரும் வருமானத்தை விடமாட்டார். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்,  மாலை மூன்று மணிக்குள், மொத்த பொருட்களையும் வீட்டிற்கு அனுப்பிவிடுகிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக் கொள்வார். அவர் மீதான நம்பிக்கையில் நீங்களும் சரி என்று சொல்லிவிட்டு கிளபுகிறீர்கள்.


பொதுவாக, கடையில்  பொருட்களை வாங்கிக்கொண்டு தானே பணத்தை கொடுப்போம்; இப்போது பணத்தை  கொடுத்துவிட்டோம் பொருட்களை வாங்கினோமா? ஒரு பொருளை அதற்குரிய பணத்தை கொடுத்துவிட்டு வாங்குவதற்கு பெயர் வணிகம். நம்மை பொறுத்த வரை வணிகம் இன்னும் முடியவில்லை. உடனே, பொருள் கிடைக்கவில்லை ஆனால் சில மணி நேரம் கழித்து கிடைக்கும். ஒரு வகையில், அந்த சில மணி நேரத்திற்கு, கடைக்காரர் நம்மிடம் கடன் வாங்கியிருக்கிறார் என்று சொல்லலாம்.


சொன்னபடி மாலை மூன்று மணிக்கு கடைக்காரர் பொருட்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். உண்மையில் இப்போது தான் ஒரு வணிகம் முழுமையடைகிறது. காலையில் நீங்கள் பணத்தை கொடுத்த  போது வணிகம் முடியவில்லை; மாலை மூன்று மணிக்கு பொருட்களை வாங்கிய  பின்பு தான் வணிகம் முடிந்தது. எப்படியும் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில். அந்த சில மணி நேரம், நீங்கள் கடைக்காரருக்கு கடன் கொடுத்திருக்கிறீர்கள்.
இவ்வளவு நேரம் உங்கள் பார்வையில் வணிகத்தைப் பார்த்தோம். இனி அந்த மளிகை கடைக்காரர் பார்வையில் இருந்து, இதே வணிகத்தைப் பார்ப்போம்.


பயன்படுத்த, பொருட்களை வாங்குபவர்கள் நாம்; வருமானத்திற்காக பொருட்களை வாங்கி, விற்பவர் கடைக்காரர். ஒரு விலைக்கு பொருட்களை வாங்கி, சிறிது விலை கூட்டி விற்று, வருமானம் ஈட்டுவது அவர் தொழில். எந்தெந்த காலங்களில் என்னென்ன பொருட்களின் விலை எறும் இறங்கும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதற்கேற்றார் போல் கடைகளில்  பொருட்களின் இருப்பு இருக்கும். ஒருவேளை நாம் கேட்கும் பொருள் இல்லை யென்றாலும், அவர் வழக்கமாக வாங்கும் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கிக் நமக்கு கொடுத்துவிடுவார்.


நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் அவரின் வருமானம் உள்ளது. நாம் பணம் கொடுத்து ஒரு பொருள் வாங்கியதும் அவருக்கு வருமானம் வந்துவிடும். பொதுவாக கடைக்காரர் பொருளை கொடுத்துவிட்டு, அதாவது விற்றுவிட்டு தானே பணத்தை வாங்க வேண்டும். காலையில் பணத்தை வாங்கிக் கொண்டார், பொருளை விற்றாரா? பொருட்களை விற்காமலேயே வருமானத்தை ஈட்டிவிட்டார். வாடிக்கையாளர்கள், அவர் மீது வைத்த நாம்பிக்கையால் தான், அவரால், பொருள் இல்லாமலேயே விற்பனை செய்ய முடிந்தது. கடைக்காரரை பொறுத்த வரை வணிகம் இன்னும் முடியவில்லை.


சொன்னபடி மாலை மூன்று மணிக்கு பொருட்களை வீட்டிற்கு  அனுப்பிவிட்டார். உண்மையில் அவரைப் பொறுத்தவரையில் இப்போது தான் வணிகம் முடிந்தது. அந்த சில மணி நேரம் வரை கடைக்காரர் உங்களிடம் கடன் வாங்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பட்டியலில் இல்லாத பொருட்களை, மாலைக்குள், எப்படியும் மொத்த விற்பனையாளரிடம் வாங்கி கொடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் தான், அவர் காலையில் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.


காலையில், கடைக்காரர், பொருட்களை விற்காமலேயே அதற்குரிய பணத்தை வாங்கி, வருமானத்தை ஈட்டிவிட்டார். மாலை, மொத்த விற்பனையாளரிடம், அந்த பொருட்களை வாங்கி உங்களுக்கு கொடுத்து வணிகத்தை முடித்துவிட்டார். இந்த முறைக்குப் பெயர் தான் விற்று வாங்கிவது. நீங்கள் ஒரு கடைக்காரர் மனநிலையில் இருந்து பார்த்தால் தான் இந்த முறை புரியும்.


பங்கு சந்தையில், பங்குகளை, விற்று விட்டு வாங்குவது என்பது இந்த முறையில் தான் நடக்கிறது.

=================================================

Nifty  அளவுகள் March 2019.

 

தொழில் நூட்ப பகுப்பாவின்படி, March  மாத 2019 nifty அளவுகள் .


மதிப்பிற்குரிய பங்குச்சந்தை வணிகர்களுக்கு,
வணக்கம்..!!!

கடந்த 2 மாதங்களாக நிபிட்டி பக்கவாட்டில் பயணிப்பதால், நான் கடந்த மாத அளவுகளையே இந்த மாத (மார்ச்) அளவுகளாகக் கொடுக்கிறேன்.

 

Nifty Spot  மேல் நிலை வர்த்தக அளவுகள்  – 11,400  to 11,900.

Nifty Spot  கீழ் நெல்லை வர்த்தக அளவுகள்  – 10,500  to 10,000.

 

Nifty Spot  பலமான தடுப்பு அளவுகள்  11,400 levels.

 

Nifty Spot, மேல் செல்ல கவனிக்க வேண்டிய அளவுகள் 10,900  to 11,100 levels.

Nifty Spot, கீழ் செல்ல கவனிக்க வேண்டிய அளவுகள்  10,700 – 10,500 

.வர்த்தகம்  இனிமையாக அமைய வாழ்த்துக்கள்,.!!!





 Nifty  அளவுகள்.

 

தொழில் நூட்ப பகுப்பாவின்படி, January  மாத 2019 nifty அளவுகள் .

 

Nifty Spot  மேல் நிலை வர்த்தக அளவுகள்  – 11,400  to 11,900.

Nifty Spot  கீழ் நெல்லை வர்த்தக அளவுகள்  – 10,500  to 10,000.

 

Nifty Spot  பலமான தடுப்பு அளவுகள்  11,400 levels.

 

Nifty Spot, மேல் செல்ல கவனிக்க வேண்டிய அளவுகள் 10,900  to 11,100 levels.

Nifty Spot, கீழ் செல்ல கவனிக்க வேண்டிய அளவுகள்  10,700 – 10,500 levels.

 

வர்த்தகம்  இனிமையாக அமைய வாழ்த்துக்கள்,.!!!

Nifty  அளவுகள்.

 தொழில் நூட்ப பகுப்பாவின்படி(Technical Analysis ) , December  மாத 2018 nifty அளவுகள் .

மேல் நிலை வர்த்தக அளவுகள்  – 11,400  to 11,900.
கீழ் நிலை வர்த்தக அளவுகள்  – 10,500  to 10,000.
 
Nifty பலமான தடுப்பு அளவுகள்  11,400 levels.
Nifty, மேல் செல்ல கவனிக்க வேண்டிய அளவுகள் 10,900  to 11,100 levels.
Nifty, கீழ் செல்ல கவனிக்க வேண்டிய அளவுகள்  10,700 – 10,500 levels.
 
வர்த்தகம்  இனிமையாக அமைய வாழ்த்துக்கள்,.!!!

 


பொருட்ச் சந்தை (Commodities): வெள்ளி (Silver)

வெள்ளி  MCX

வரைபட தொழிற்நுற்பம் (Technical Analysis ) அடிப்படையில் வழங்கப்படுகிறது

வெள்ளி 36,500 – 36,700   கவனிக்க வேண்டிய விலை நிலைகள் 

38,250   அளவுகள் ஏற்றத்திற்கு கவனிக்க வேண்டியவை

39,500 அளவுகள் உடைந்தால் கீழ் இறங்க வாய்ப்பு அதிகம்

வணிகத்தில் வருவாய் உண்டாக நல்வாழ்த்துக்கள்..!!!




பொருட்ச் சந்தை (Commodities): கச்சா எண்ணெய் (Crude Oil)

கச்சா எண்ணெய் MCX

வரைபட தொழிற்நுற்பம் (Technical Analysis ) அடிப்படையில் வழங்கப்படுகிறது

கச்சா எண்ணெய்  3,600 – 3,900  கவனிக்க வேண்டிய விலை நிலைகள் 

4,200 – 4,300   அளவுகள் ஏற்றத்திற்கு கவனிக்க வேண்டியவை

3,600  அளவுகள் உடைந்தால் கீழ் இறங்க வாய்ப்பு அதிகம்

வணிகத்தில் வருவாய் உண்டாக நல்வாழ்த்துக்கள்..!!!


பொருட்ச் சந்தை (Commodities): செம்பு (Copper)

செம்பு MCX

வரைபட தொழிற்நுற்பம் ( Technical Analysis ) அடிப்படையில் வழங்கப்படுகிறது


செம்பு 430 - 450  கவனிக்க வேண்டிய விலை நிலைகள் 

450   அளவுகள் ஏற்றத்திற்கு கவனிக்க வேண்டியவை

430  அளவுகள் உடைந்தால் கீழ் இறங்க வாய்ப்பு அதிகம்

வணிகத்தில் வருவாய் உண்டாக நல்வாழ்த்துக்கள்..!!!


பொருட்ச் சந்தை(Commodities): அலுமினியம்  (Aluminium)

 அலுமினியம்  MCX

வரைபட தொழிற்நுற்பம் (Technical Analysis ) அடிப்படையில் வழங்கப்படுகிறது

அலுமினியம்  139 – 142   கவனிக்க வேண்டிய விலை நிலைகள் 

147 – 150 அளவுகள் ஏற்றத்திற்கு கவனிக்க வேண்டியவை

127 – 130  அளவுகள் உடைந்தால் கீழ் இறங்க வாய்ப்பு அதிகம்

வணிகத்தில் வருவாய் உண்டாக நல்வாழ்த்துக்கள்..!!!




பொருட்ச் சந்தை (Commodities): செம்பு (Copper)

செம்பு MCX

வரைபட தொழிற்நுற்பம் ( Technical Analysis ) அடிப்படையில் வழங்கப்படுகிறது

செம்பு 430 - 450  கவனிக்க வேண்டிய விலை நிலைகள் 

450   அளவுகள் ஏற்றத்திற்கு கவனிக்க வேண்டியவை

430  அளவுகள் உடைந்தால் கீழ் இறங்க வாய்ப்பு அதிகம்

வணிகத்தில் வருவாய் உண்டாக நல்வாழ்த்துக்கள்..!!!





பொருட்ச் சந்தை(Commodities) : ஈயம் (Lead)

ஈயம் MCX

வரைபட தொழிற்நுற்பம் ( Technical Analysis) அடிப்படையில் வழங்கப்படுகிறது

ஈயம்  135   கவனிக்க வேண்டிய விலை நிலை 


146   அளவுகள் ஏற்றத்திற்கு கவனிக்க வேண்டியவை

135  அளவுகள் உடைந்தால் கீழ் இறங்க வாய்ப்பு அதிகம்

வணிகத்தில் வருவாய் உண்டாக நல்வாழ்த்துக்கள்..!!!

பொருட்ச் சந்தை  (Commodities): தங்கம் (Gold)

தங்கம் 
வரைபட தொழிற்நுற்பம் ( Technical Analysis) அடிப்படையில் வழங்கப்படுகிறது 


தங்கம் 29,600 – 30,000  கவனிக்க வேண்டிய விலை நிலைகள்  

31,300 – 31,500  அளவுகள் ஏற்றத்திற்கு கவனிக்க வேண்டியவை 

29,600 – 29, 800 அளவுகள் உடைந்தால் கீழ் இறங்க வாய்ப்பு அதிகம் 


வணிகத்தில் வருவாய் உண்டாக நல்வாழ்த்துக்கள்..!!!


பங்குச் சந்தை
பங்குச் சந்தையில் ஆர்வம் உள்ளவர்கள் , முதலில், பங்குச் சந்தைக்கு தேவையான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும், பொருட்களை பயன்படுத்த அல்லது அனுபவிக்க மட்டும் , வாங்குபவர்களுக்கு , பங்குச் சந்தையை புரிந்து கொள்வது சற்று கடினம். பங்குச் சந்தை என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்வதற்கு முன், அவரவர் வாழ்க்கை முறையையும் , அதனால் வளர்த்துக் கொண்ட மனிலையையும் சற்று சிந்திக்க வேண்டும்.
ஆடை வாங்க நினைக்கிறோம். நாம் என்ன யோசிப்போம். இந்த ஆடையை இந்த விலைக்கு வாங்கலாமா. எததனை மாதங்கள் அணியலாம், என்று பயன் கருதி வாங்குவோம். இது தான் நுகர்வோர் மனநிலை.! அந்த ஆடையை அணிவதில் அலுப்பு ஏற்படும் போது அல்லது அதை இனி அணிய இயலாது என்ற நிலை ஏற்படும் போது, கிழிசல் ஏதும் இல்லையென்றால், வசதி யில்லாதவர்களுக்கு கொடுப்போம். கிழிசல் இருந்தால்,சமயலறைக்கோ வாகனம் துடைக்கவோ பயன்படுத்துவோம். பணம் கொடுத்துப் பொருள் வாங்கி பயன்படுத்த மட்டும் பழகியவர்களுக்கு அதை விற்று மீண்டும் பணமாக்கும் எண்ணம் பெரும்பாலும் வருவதில்லை. காரணம் நுகர்வோர் மனநிலை.
இருப்பினும், சில பொருட்கள், கைபேசி, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிகள், குளிர் சாதனப் பெட்டிகள், பஞ்சு மெத்தை இருக்கைகள், வீடு, வீட்டு நிலங்கள், போன்ற சிலவற்றை நாம் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். இவற்றை பயன்படுத்துவதில் அல்லது அனுபவிப்பதில் அலுப்போ, புதிதாக வாங்க வேண்டும் என்ற விருப்பமோ உண்டாகும் போது, இவற்றை நாம் யர்ருக்காவது தானம் கொடுத்துவிட்டு புதிய பொருள் வாங்குவதில்லை; மூலையிலும் போடுவதில்லை, மாறாக, வந்த விலைக்கு விற்று மீண்டும் பணமாக மாற்றுகிறோம்.. இப்போது நாம், தெரிந்தோ தெரியாமலோ வியாபாரியாக மாறுகிறோம். இதுதான் வியாபாரி மனநிலை!
பங்குச் சந்தைக்கு தேவை, இந்த வியாபாரி மனநிலை தான். ஆனால், இந்த வியாபாரி மனநிலை அதிக நேரம் நீடிப்பதில்லை. காரணம், வாழ்நாளில் பெரும்பகுதி, பொருட்களை பயன்படுத்துவதிலும், அனுபவிப்பதிலும் கழித்தது தான். விற்று வந்த பணத்தோடு தேவையான பணம் சேர்த்து விரும்பிய பொருளை வாங்கி, பயன்படுத்த அல்லது அனுபவிக்கத் துவங்கிவிடுகிறோம்.மீண்டும் நுகர்வோர் மனநிலைக்கு மாறுகிறோம், தொடர்கிறோம்.
நமக்குள் ஒளிந்திருக்கும் வியாபாரியை மெல்ல மெல்ல வெளிக் கொண்டுவரப் பழகவேண்டும் .ஒரு வியாபாரியாக சிந்திக்கும் போது தான் பங்குச் சந்தையை புரிந்து கொள்ள முடியும். வாழ்க்கையில் பெரும்பான்மையான நேரம் நுகர்வோர் மனநிலையில் வாழ்பவர்களுக்கு, பங்குச் சந்தை என்பது குழப்பமாகத் தான் இருக்கும்.காரணம் பழக்க முறை. மனம் பழக்கத்திற்கு அடிமையானது, பங்குச் சந்தைக்கு தேவையான வியாபாரி மனநிலையை வளர்க்க பழக வேண்டும். வியாபார மனநிலையை வளர்ப்பது எப்படி; வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டே வருமானத்தைப் பெருக்கிக் கொல்வத்து எப்படி.
தொடரும்.....

No comments:

Post a Comment