Monday, January 18, 2016

புதுமைப் பொங்கல்

தைநாளில் வடக்கு திரும்பும் தினகரா,
விதைத்த நெல்லை வளர்த்து தந்த பகலவா;
அறுத்த நெலலில் பொங்கல் வைத்தோம் விகத்தகா,
தைப்பொங்கல் ருசிக்க கொஞ்சம் இறங்கிவா;
ஆசிதந தருள வேணும் மித்திரா.

விவசாயி நெல்லு பொங்கல் கண்டவா..!
தொழிலாளி புதுமைப் பொங்கல் காணவா..!

கதிராலே அறிவு தூண்டும் கதிரவா,
மண்டைப் பானை யண்ண நெல்ல அழலவா;
அன்பு வடுப்பில் பொங்க வச்சோம் ஆதவா,
நல்லெண்ணம் பொங்குதுப் பார் உண்ணவா;
நல்ல காலம் பொறக்க வருள் செய்யவா.

விவசாயி நெல்லு பொங்கல் கண்டவா..!
தொழிலாளி புதுமைப் பொங்கல் காணவா..!


Monday, January 11, 2016

இனி ஒரு விதி செய்வோம்

அறியாமை மேகம் மறைக்க,
அறிவுச் சூரியன் மங்க,
ஆசை ஆட்டுவித்த ஆன்மாக்கள்,

ஆற்றிய சுயநலச் செயல்கள்,
நல்லோர் நலனை சிதைக்க!
தீயோர் குலத்தை ஒடுக்க,
இனியொரு விதி செவோம்.

கல்வி யாயுதம் செய்வோம்,
காசில் லார்க்கும் தருவோம்;
ஞான தானம் செய்வோம்.

அறியாமை மேகங்கள் அகலும்,
அறிவுச் சூரியன் மின்னும்.
அமைதி எங்கும் நிலவ,
இனி ஒரு விதி செய்வோம்

குறிப்பு:

இக்கவிதை தின மணி இணையதள "கவிதைமணி" என்ற பகுதியில் இந்த வார தலைப்புயில் வெளியானது.