Saturday, June 18, 2016

“குறிச்சி டைம்ஸ்” எனற பத்திரிக்கையில் எனது “இன்பக் குளியல்” என்ற கவிதை வெளியாகியுள்ளது.

இனிக்கும் இன்ப குளியல்
இனிது இயற்கை குளியல்
குளம், ஏரிக் குளியல்,
உளம் விரும்பும் குளியல்;
உள்ளங் கால் தொட்டதும்,
உள்ளம் உடம்புள் துள்ளும்;
உடல் முழுதும் சிலிர்க்கும்;
உடல் நீரில் மூழ்க,
பற்கள் வாத்திய மாக
ராக மொன்று பிறக்கும்;
இழுத்து பிடித்த உணர்வை,
ஓடை இழுத்துக் கொண்டு
ஓடும்; குழந்தை மனம்
ஓங்கும், அக்கம் பக்கம்
மறக்கும், பரவசம் பிறக்கும்;
நீரில் உள்ள வரை
நிலைக்கும், நிலை குலைய
வைக்கும்; உடல் மிதக்கும்
வரை உள்ள சுகம்
நீர்த் தரும்பிர சாதம்;
குல தெய்வ கோயில்
குரு தெய்வ கோயில்
குளத்தில் குளிக்கும் போது
மட்டும் கிட்டும் சுகம்ஆன் மசுகமே..!

ஏரி குளம் குட்டை யெலாம்
வீட்டைக் கட்டி வைக்க
வரும் அடுத்த வம்சம்
இயற்கை குளியல் சுகிக் காதே..!

அழுக் கை நீக்க குளியல்
மட்டு மல்ல குளித்தல்
நீர்ப்பி ராணன் எடுப்பதும்
சூர்ய சக்தி பிடிப்பதும்
குளித் தலின் நோக்கமே
கதிர் உதிக்கும் முன்னமே
குளிர் நீரில் குளிக்கவே
நீர் ஞாயிறு சக்தி கிட்டுமே..!

எவ் வூர் தண்ணி யிலும்
எப் பருவ மானா லும்
முதல் மூன்று முறை உள்ளங
கையில் நீரள்ளி நிதான மாய்
உதடால் உரிஞ்சி யுரிஞ்சி குடிக்க
உடமபு நீரை சோதிக் கத்தக்க
நோய் எதிர்ப்பு உண்டாக் கப்பின்
முங்கி முங்கி நாள் முழுதும்
குளித்தா லும்ஊ றொன்று நேரா
வுடபிற் கேயிது முன்னோர் வாக்கே..!
-சுதாகர்


6 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..!

    ReplyDelete
  3. Replies
    1. Dear Sir,

      Thanks for spending your time and for your valuable comment..!
      It encourages me..!
      Thank you,
      sudhakar

      Delete
  4. Replies
    1. Dear Rajesh,

      Thanks for visiting and for your comments..!

      It encourages me..!

      Thank you,
      sudhakar

      Delete