Thursday, April 7, 2016

வறுமை கொடுமை..!

புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.


என்னடா இது கொடுமை..!
கொடிதடா இவ் வறுமை..!
தடை படா உணவை
கொடப் பாஅ கடவுளே..!

குருத்தும் வறுமையில், பழுத்ததும் வறுமையில்;
கருணைக்கு பஞ்சமா? உணவுக்கு பஞ்சமா?
அவரவர் பார்வையில் பசிநோய் பட்டால்
அவரவர் இயன்றளவு அக்கறை கொண்டால்
அவளச் சமுதாய அளவு குறையுமே..!

பள்ளி செல்லும் பருவம்;
பிள்ளை கவனம் பசி;
பசிக்கு உணவு கொடுக்கும்,
திருடனும் கடவு ளாவானே..!

சுற்றி கொடுமைகள்; எல்லாம் எதனாலே?
வற்றிய வயிறு, நரம்பாத தனாலே;
‘நமக்கென்ன..’ வென்று வலகு வதாலே,
நிக்ழும் கொடுமைகள் நம்மை விடாதே..!

முன்வினைப் பயனாலே பசிநோய் தாக்க,
உணவு மருந்திட்டு பசிநோய் விரட்ட,
நம்மால் இயன்றதை ‘சட்’டெனச் செய்ய,
நல்லவர் படைக்குள் அடைக்கலம் கொடுப்போம்;
திருடர் படைக்குள் இழுக்கும் முன்னரே..!
-சுதாகர்


No comments:

Post a Comment