Monday, April 4, 2016

சோதனைகள் பல கடந்து


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

சோதனைகள் பல கடந்து
உயிர் பிழைக்க இயலுமோ
குல தெய்வம் காக்க..!
குரு தெய்வம் காக்கவே..!

எந் நேரம் மரணம்
எனைத் தழுவ நேரும்
என் அறிவால் ஆவது
இனி யொன்று மில்லை
நான் வணங்கும் தெய்வம்
நன்மையைத தான் செய்யும்..!
நிச்சயம் ஏதோ நிகழும்
என் உயிர் பிழைக்கும்..!
மனம் கலங்கி யிருக்க,

கதி யற்று முழிக்க,
இக் கட்டுப் போக்க ,
விதி மாற்றி வைக்க,
கோள் கட்டி யாளும்,
படி அளக்கும் தெய்வம்,
பதம் சரணா கதி..!
-சுதாகர்


No comments:

Post a Comment