Monday, June 25, 2018

விதி

வினையின் பலனாய் விளையும் அனுபவம் வாழ்க்கை...
நினைவு மறந்த நிகழ்வின் பலனே விதி.

Thursday, June 21, 2018

குயில்

குயில் கூவும் விதம்... கோவித்தத்  தாய்முகம் பார்த்து,
உயிர்உருகக் கெஞ்சும் மழலையின் ஓசையை போல் இருந்தது.

Monday, June 11, 2018

மருந்து


செடியழிக்கும் பூச்சி விரட்ட
சிறந்த மருந்து நிறையவுண்டு
குடிகெடுக்கக் கூடிப் பழகும்
கொடியோரை வாட்டும் மருந்துண்டா

முயற்சி



கைகளின் கட்டை விரல் ரேகைகள்
காட்டும் உலகில் எனது தனித்துவம்
கைகள்தான்  கட்டி யிருந்தாலும் சூழலால்
கட்டவிழ்க்கும்  என்முயற்சி காட்டுமே என்தனித்துவம்

Sunday, June 10, 2018

செயல்

செய்யும் செய லெல்லாமே
சிந்தையில் நிற்பது மில்லை
செய்த செயல்கள் பலன்
செய்ய மறப்பது மில்லை
யாருக்கும் எத்தீங்கும் செய்யவில்லை
ஏன் எனக்கிந்தத் துன்பம்?
யாரும் நினைக்கும்முன்  எண்ணுவோம்,
என்றும்  விதைத்தது தான்விளையும்

Friday, June 8, 2018

மனம்

எதிர் பார்த்து பெரும்
ஏமாற்றம் ஏற்படும் போது
அதிரும் மனம் கூறிடும்
ஆத்திரத் தீர்வை மறந்திடு

எல்லாமே மாறும் எதுவும் நிலை யில்லை
உள்ளமோ மாற்றங்கள் ஊகிப்ப தில்லை; தொல்லை

எல்லாம் அறியும் இறையை நினைத்துப் பொறுத்திரு உள்ளப் புயல் ஓய்ந்திடும் தோன்றிடும் நல்தீர்வு


போர்க்களம்


எதிர்பார்த்து காத்திருக்கும் காலம்தான்,
ஏமாற்றம்  நம்பிக்கை,   ஈரணியாய்
அதிர்வலைகள் உண்டாக்க, உள்ளம்
அறிவு, பலம்பார்க்கும்  போர்க்களம்

Thursday, June 7, 2018

மனம்

தடுப்பு கடந்துயாவும் கண்டிடும்
சக்தியோ  மானிடற் கில்லை
அடுத்து வருவது யாவும்
அறிதல் பலர்மனதிற் கில்லை


மாற்றம் சுழற்சி முறையில் நிகழும்
மனமோ பெற்ற யறிவில் இயங்கும்
மாற்றம் நிகழும் முறையை தவிர்த்து
மனம் தீட்டிடும்  திட்டமும் வெல்லாது