Wednesday, April 13, 2016

மழலை


எந்தன் செவ் விதழ் ரோசாவே
எந்தன் வாழ்வின் நோக்கமே
உந்தன் வினைகள் தீர்க்கவே
எந்தன் வீட்டில் பிறந்தாயே
எந்தன் வரமாய் வந்தாயே..!

பஞ்ச பூதம் பிசைந்து,
பகவான் படைத்தப் பிராசாதமே!
குலந் தழைக்க, குல
தெய்வம் தந்த விழுதே..!

முளைக்கையில் மணக்கும் துளசியே,
குளிரில் உதரும் உடல்போல்,
கைகால் அதிர்வில் தெய்வநடனமே..!

ஈறின் சிரிப்பில் ஈரம்
சுரக்கும் கல் நெஞ்சிலே,
விரல் பட்டதும் சினுங்கும்
தொட்டாச் சினுங்கியே.

முயல் போல் மூச்சும்;
குட்டி வாய் திறந்து
கொட்டாவியும்; இதழ் பிதுங்கி
அழுவதும்; உறங்கும் போது
சினுங்களும், சிறு சிறு
மொனங்களும்; இசைப் பாடம்
சொல்லாத ராகங்களே; நீ
விழித் திருக்கும் நேரமெல்லாம்
தேவ லோக நாடகமே..!

உற்று உற்று பார்த்தாலும்
கருவறை விட்ட கன்றதும்,
மனக் கண்ணில் நிற்காத
திருப்பதி பெருமாள் போல்,
கசக்கிக் கசக்கிப் பிழிந்தாலும்
மூளையை, நீ பிறந்த
முதல் நாள் முகம்
ஞாபகம் வர வில்லையே..!
கடவுள் உனை கவசமாய் காகுமே..!


No comments:

Post a Comment