Friday, May 6, 2016

“மரம் பேசுகிறேன்”

குறிப்பு:” மரம் பேசிகிறேன்” என்ற இக்கவிதை ‘கவிதைப் பட்டறை’ யின் கவிதைப் போட்டியில் பாராட்டப் பட்ட பத்து கவிதைகளில் இடம் பெற்றுள்ளது.

கதிரொளியை உணவாக்கும் திறம் கொண்ட மரம் பேசுகிறேன், கொஞ்சம் கேள்..!
உணவு வலையின் அங்கமே,
குளிர் நிழலுக் கொதுங்கிய மனிதனே..!

உன் தேவை; ஆசை; அடையும்
குறியில் செயல்படும் மனிதா, புவி
இயற்கை சம நிலை இழக்கும்
நிலைவரும், உன் செயலாலே..!

இயற்கையில் எதுவும் இயல்பில் இயங்கும்
இயற்கையின் இயல்பு சமநிலை காப்பது.
ஒன்றை யொன்றுத் உணவாய்த் திண்று
உணவுச் சங்கிலி உடையா வண்ணம்
வனத்தின் உயிர்கள் சமநிலை காக்கும்.
பசியின்றி உண்ணும்; உணர்வால் இயங்கும்;
மனிதப் பெருக்கம் சமநிலை குலைக்கும்.

இயற்கையில் எதுவும் அளவுக் கதிகம்
பெறுக்கம் கொண்டால் உண்வுச் சங்கிலி
யுடைப்டும்; விளைவு, இயற்கைச் சீறறம்
படை யெடுக்கும்; சமநிலை தனனை
நிலை நாட்டும்; விதி இதுவே..!

காடு, பூமித் தாயின் நுரையீரல்..!
புற்றுநோய்க் கிருமிகள் போல்
அரிக்கிறீர்களே பூமித் தாயிக்கு
வைத்தியம் பார்ப்பது யாரே..? யாரே..?.

இயற்கைச் சமநிலை கெடுப்பதும் நீயே..!
உணவுச் சங்கிலி உடைப்பதும் நீயே..!
பணத்தோடு வாழ்ந்து பழகிய மனிதா
மரத்தோடு வாழக் கொஞ்சம் பழகு.
வரும் சங்கதிகள் உன்போல் நிழல்
பெறச், செல்லும் போது சிந்திப்பாயே..!
-ச.சுதாகர்.


No comments:

Post a Comment