Wednesday, December 21, 2011

தியானம்.

சித்தத்தை, காலி செய்வது தியானம்;
நிரப்புவது அல்ல தியானம்.
மறப்பது தியானம்;
ஞாபகம் அல்ல தியானம்.

மனப்பதிவுகளை,
வேடிக்கைப் பார்ப்பது தியானம்,
பாதிப்படைவது அல்ல தியானம்.
மனதை, புத்திக்கு வசப்படுத்துவது தியானம்;
மனதை ஒடுக்குவது அல்ல தியானம்.

புத்தியால்,
பதிவுகளை களையெடுப்பது தியானம்;
விதைப்பது அல்ல தியானம்.
புத்தி எல்லையை கடந்து செல்வது தியானம்;
புத்திக்குள் சுருங்குவது அல்ல தியானம்.

செயலில்,
நோக்கத்தை கவனிப்பது தியானம்;
செயலின்,
எதிர்விளைவை சிந்திப்பது அல்ல தியானம்.
அகங்காரத்தை,
செயலின் கருவியாக்குவது தியானம்,
கர்த்தாவாவது அல்ல தியானம்.

இயற்கையின் சுபாவத்தை அறிவது தியானம்;
இயற்கையின் இயக்கத்தில்,
குறை காண்பதல்ல தியானம்.
சிந்தனை கோணத்தை மாற்றுவது தியானம்;
சிந்திப்பதை நிறுத்துவது அல்ல தியானம்.

ஆசைகளை கடந்து செல்வது தியானம்;
ஆசைகளை அடக்குவது அல்ல தியானம்.
உண்பது, உறங்குவது போல்,
காலச்செயல் அல்ல தியானம்.
மனம், மெய், மொழி வழி,
இயங்குவதே தியானம்.

மனதில்,
இறைவனுக்கு இடம் ஒதுக்குவது தியானம்;
இயற்கையோடு இசைந்து வாழ்வது தியானம்.

Saturday, December 10, 2011

ஆசை ஒப்பனைக் கலைஞன்.

ஆசை ஒப்பனைக் கலைஞன்.
ஒருவரைப் பிடித்துவிட்டால்,
மனதுக்கு,
அவரின் குறை கூட நிலவு கரை.
பிடிக்காவிட்டால்,
குணம் கூட குறை.
பலன் கருதா பாசம்
நிஜ முகம்.
பலன் கருதும் பாசம்
ஒப்பனை முகம்.
வண்ணப் பொடிகளின்
பெட்டி மனம்;
ஆசை ஒப்பனைக் கலைஞன்;
சருகையும், இலையாகக் காட்டும் ஆற்றல்.
ஆசையின் ஆட்சி அடிதளத்தில்,
அறிவு அங்கே அடிமை.
மத யானைக்கு அங்குசமா..?
ஆசை ஒப்பனைக் கலைஞன்.

Monday, June 6, 2011

எல்லோர்க்கும் எல்லாம் கிடைப்பதில்லை..!

எல்லோர்க்கும் எல்லாம் கிடைப்பதில்லை.
நிறைவு, குணங்களோடு தொடர்புடையது,
அனுபவிக்க வேண்டிய பொருட்களின் எண்ணிக்கைகளோடு அல்ல.
குறை, சூழ்நிலைகளோடு தொடர்புடையது..
குணங்களின் சங்கமம் சுழ்நிலை.
நம் குறைகள் மேலோங்கும் சூழ்நிலைகள்,
அமைவதும், அமையாதிருப்பதும், கடவுளின் கருணையால்.
நம் முயற்சியால் அல்ல..!
ஒரு நிகழ்ச்சிக்குக் கிளம்புவோம்;
ஏதோ விதத்தில்,
முயற்சித்தும், தவிர்க்க இயலாத தாமதம் உண்டாகும்;
காலம் தாழ்த்தி அடைவோம்;
அங்கே, சற்று முன்பு, நம் குறை காணும் மனிதர்கள் அகன்றது தெரியவரும்.
கடவுள் அருள் பெற்ற தருணமிது..!
விரும்பாத சுழ்நிலையில் சிக்கிக்கொள்வதும்,
விரும்பிய சுழ்நிலையை அமைத்துக் கொள்வதும்,
ஓர் அளவிற்கு மேல், நம் முயற்சிக்கு அப்பாற்பட்டவை.
எதிர்பாராமல் கோயிலுக்குச் செல்லும்படி அமையும்,
அந்நாளும், அந்நேரமும், அத்தெய்வத்துக்கு உகந்ததாக இருக்கும்.
இது முயற்சியா..? கடவுளின் கருணையா..?
யாவும் காரண காரிய அடிப்படையில் இயங்குகின்றன.
எதிபாராத நிகழ்வுகளின் காரண காரிய விதிகள்,
நம் அறிவிற்கு அப்பாற்பட்டவை;
அது ஆண்டவன் கணக்கு..!.
பழக்கங்கள் நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கின்றன;
பழகத்தால் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சூழ்நிலைகளை எதிர்கொள்வதும் பழக்கங்களின் துணையால்.
மற்றவர் மதிப்பிட்டில் நிறைவு தேடும் பழக்கம்,
கடவுளின் கருணையில் நிறைவு தேடும் பழக்கமாக மாறினால்,
இருப்பதில் திருப்தி குணம் நிறைந்துவிடும்.
இறைவன் மடியில் நாம்..!
எல்லோர்க்கும் எல்லாம் கிடைப்பதில்லை..!

Saturday, March 5, 2011

மா இலை டீ

தேவையானப் பொருட்க்ள் (ஒருவருக்கு):
ஒரு கப் தண்ணீர்.
2-3 இளம் மா இலைகளை சிறு துகள்களாகி 1 தேக்கரண்டீ.
தேயிலை 1/2 தேக்கரண்டீ.
பனங்கற்கண்டு தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்ககும். மா இலைத் துகள்களைச் சேர்க்கவும். 5 நிமிடம் வேகவிடவும். இப்போது தேயியலை சேர்க்கவும். 1-2 நிமிடங்களில் அடுப்பை அனைத்துவிடவும். ஆறிய பின் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

பலன்கள்
காலையில் பருகினாள் அன்று முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். மன அழுத்தம் மறறும் சோம்பலைப் போக்கக் கூடியது. இதில் பாபின் என்னும், செரிமானத் திரவம் உள்ளதால் ஜீரணத்திற்கு உதவும். நீண்ட நாள்கள் நோய் வாய் பட்டு குணமானவர்கள், இதை தினநதோறும் பருகிவந்தாள் விரைவில் இழந்த சக்தியைப் பெருவார்கள். இரும்புச் சத்து அதிகம் கொண்டது. அதனால் பெண்கலுக்கு அதிகம் நன்மை பயக்கக் கூடியது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் மாதவிடாய் காலங்களில் பெரிதும் நன்மை செய்யக் கூடியது. அனிமீயா என்னும் இரத்த சோகை உள்ளவர்கள் பருகுவது நன்னைத் தரும். மாங்காயின் அனைத்துக் குண்ங்களும் மாயிலையில் உள்ளது. மா இலை டீயை பருகி மகிழுங்கள்.

Friday, February 18, 2011

சின்னச் சின்னச் சூரியர்களே..!




செடிகளே, கொடிகளே, தருக்களே,
என் மீது விழும் சூர்யக்கதிர்களை
உணவாக்கும் ஆற்றல் இல்லையே..!
அளவு சிறியதானாலும்
அந்த அருகம் புல்லின் கம்பிரம் உயர்ந்தது..!
உணவு தேடும் தேவை இல்லாததால் தான் நீங்கள் நகர்வதில்லையோ..!
சொந்தக் காலில் நிறபது என்பது இதுதானோ..!
சக்திக்காக சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் போல,
மனிதர்களும், மிருகங்க்ளும், மனிதமிருகங்களும்,
சுற்றி வரும் சின்னச் சின்னச் சூரியர்களே...
"கொன்றால் பாவம் திண்றால் போச்சு.." என்னும்
சித்தாந்தம்
"நட்டுவிட்டு வெட்டு.." என்று மாறும் காலம் எப்போது..?

Wednesday, February 16, 2011

¸Õ¨½ §ÅñÎõ

«È¢¨Å Áò¾¡ì¸¢,

Íú¿¢¨Ä¸¨Çì ¸Â¢Ã¡ì¸¢,

¿øÄÅ÷ ¦À¡øÄ¡¾Å÷¸¨Ç þÕÒÈõ ¿¢Õò¾¢,

ÁÉì ¸¼¨Äì ¸¨¼¸¢Ã¡ö þ¨ÈÅ¡...

Á¡È¢, Á¡È¢, þýÀÓõ ÐýÀÓõ

¦ÅÇ¢ôÀðÎ, «¨Äì¸Æ¢ì¸¢ýÈÉ..!

«¸í¸¡Ãõ «Æ¢Ôõ ŨÃ,

«Á¢÷¾Á¡É ¿¢ò¾¢Â ¬Éó¾õ

¦ÅÇ¢ôÀ¼¡Ð..!

¸¨¼¾Öõ ¿¢ü¸¡Ð..!

«îÍúºÁò¨¾ «È¢Â,

«¨¼¸¢§Èý ºÃ½¡¸¾¢..

¸Õ¨½ §ÅñÎõ þ¨ÈÅ¡..!

Wednesday, February 9, 2011

எனக்குள் நீ... உனக்குள் நான்...
பயம், ஏக்கம், விரக்தி, ஏமாற்றம்
போன்ற உணர்வுகள் மேலோங்கும் போது,
நடைபழகும் குழந்தை இடறி விழுந்து,
தன்னைத் தூக்கித் தேற்ற, ஆதரவு தேடி அழுவது போல்,
மனம் நிம்மதிக்காக அடைக்களம் தேடுகிறது.
அள்ளி அணைத்து தேற்ற வரும் தன்னலமற்றத் தாய் போல்,
நம்மைத் தேற்றக் கடவுள் வருவதில்லை.
நாம் குழந்தையாக இல்லாததால்..!
முயற்சியில் தடை,
நம்மை முடக்குவதற்காக அல்ல,
மேலும் முன்னேற்ற, முடுக்கி விட,
கடவுள் தரும் கொடை..!
இந்தப் புரிதல் சக்தி இல்லாததால்,
இடறி விழும் போது குழந்தை அழுகிறது...!
தூக்கித் தேற்ற ஆதரவு தேடுகிறது..!
அப்போது, அன்னையாக கடவுள் நம்மோடு இருந்தார்;
நாம் அவருக்குள் இருந்தோம்.
இப்போதும், புரிதல் சக்தியாக கடவுள் நம்மோடு இருக்கிறார்;
இப்போது, அவர் நமக்குள் இருக்கிறார்..!

Wednesday, January 26, 2011

பணம்



உறவுகள் உதாசீனப் படுத்தும் போது...
உச்சி வெய்யிலில் நிற்கும் போது...
நம்பியவர்கள் ஏமாற்றும் போது...
தேர்வில் தோற்கும் போது...
விருப்பம் இல்லாத ஒன்றை திணிக்கும் போது...
ஏற்ப்படும் மன நிலைகளை...
பணம் என்ற மாய சக்தி குறையும் போது,
மனம் அடைந்து விடுகிறது...!