Thursday, April 15, 2010

நேற்றுக் கொட்டுக்கப்பட்ட இலவச ஆலோசனைகள்
நேற்று கொடுத்த ஆலோசனைகள் எல்லாம் சந்தை முடியும் போது தான், நான் விற்கச் சொல்லி கொடுத்த அளவையே அடைந்தன. அதனால் இலக்கை எட்டவில்லை!
பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி மேல் நோக்கிய இடைவெளியோடு துவங்கியது; மேலும் அந்த இடைவெளியை இன்றே நிறைக்கவும் செய்தது. 7 நாட்களாக சிறந்த பாதுகாப்பு புள்ளியாக விளங்கிய 5301 உடைத்து, அதற்குக் கீழ் முடிவடைந்தது. நிப்டியில் வர்த்தக அளவு நன்றாக இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்றும் நிப்டியில் பங்குகள் வாங்கி இருந்தனர். அவர்கள் 99 .7 கோடிக்கு பங்குகள் வாகினார்கள்.உள்நாட்டு முதலிட்டாளர்கள் 76 .87 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர். நிபிட்டி 50 தில் விலை ஏறிய பங்குகள் 17 ஆகவும் விலை இறங்கிய பங்குகள் 33 ஆகவும் இருந்தது. இன்று நிப்டியில் 5327 நல்ல பாதுகாப்புப் புள்ளியாக செயல்பட்டது ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் அதனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்
அந்நிய முதலிட்டாளர்கள் இன்னமும் பங்குகள் வாங்கிய வண்ணம் இருப்பதால் என்னால் நிபிட்டி கீழ் இறங்கும் என்று சொல்ல முடியவில்லை. மேலும் நாளை தான் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளாக இருப்பதால் எப்படி பங்குச்சந்தை செயல்படுகிறது என்று பர்ர்க்க வேண்டும். நாளைய வர்த்தகத்திற்கு 5274 புள்ளி அளவு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். என்னுடைய கணிப்பில் இந்த 5274 புள்ளி அளவு, நிபிட்டி, மேல் நோக்கி செல்வதற்கோ கீழ் நோக்கி செல்வதற்கோ ஒரு நுழை வாயில் போல இருக்கும் என்று நினைக்கிறேன்
. நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நாளைய நிபிட்டி அளவு
5301 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5327 , இலக்கு 2 - 5355 நஷ்டத் தடுப்பு - 5288
5284 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5268 இலக்கு 2 - 5245 நஷ்டத் தடுப்பு - 5301
வருக்கைக்கு நன்றி!

No comments:

Post a Comment