Saturday, April 3, 2010

பங்குச்சந்தை அடுத்த வார நிலவரம் [05/04/10 – 09/04/10]
விரைவில் வரவிருக்கும் பண முறை சார்ந்த கொள்கை மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், அடுத்த வார பங்குசந்தையின் போக்கை நிர்ணயிக்கும். கடந்த இரண்டு வாரங்களாக நிபிட்டி, மிகக் குறுகிய எல்லைக்குள் தான் வர்த்தகம் நடைப்பெற்றுள்ளது. இதே போல் அடுத்த வாரமும் நிபிட்டி, குறுகிய எல்லைக்குள் வர்த்தகம் நடைபெறலாம் அல்லது அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு ஏற்ப நிபிட்டி, மிகப் பெரிய உயர்ச்சி அல்லது வீழ்ச்சியை சந்திக்கும் என்று கருதுகிறேன். நான் இப்படி கருதுவதற்கு காரணம் கடந்த வியாழக் கிழமை அந்நிய முதலிட்டாளர்கள் மிகக் குறைந்த அளவில் பங்குகுகள் வாங்கி இருந்தனர். அடுத்த வாரத்தில் எதாவது ஒரு நாள் நிபிட்டி 5330 க்கு மேல், நல்ல வர்த்தகத்தோடு, முடிவடையுமானால் நிபிட்டி மிகப் பெரிய உயர்ச்சியை அடைய வாயிப்பு உள்ளது. அதனால் வர்த்தகர்கள் 5330 அளவுக்கு மேல் நிப்டியில் பங்குகள் வாங்குவது நல்லது. அதே போல் பெரிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏதேனும் எதிர் பார்த்த அளவு இல்லை என்றால் நிபிட்டி மிகப் பெரிய வீழ்ச்சியை அடையைவும் வாயிப்பு உள்ளது. 5220 புள்ளி அளவுக்கு கிழ் நிபிட்டி பலகீனம் அடையும் எனவே அடுத்த வாரம் இந்த அளவை மிகக் கவனமாக கவனிக்க வேண்டும்.
நிப்டியின் வர்த்தக அளவு.
மேல் நோக்கி உயர்மானால் 5220 - 5570
கீழ் நோக்கி வீழுமானால் 5330 - 4460
நன்றி!

No comments:

Post a Comment