Friday, April 9, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி நல்ல முன்னேற்றத்துடன் முடிவடைந்தது. மேலும் முக்கிய இடர் புள்ளியான 5355 அளவைத் தாண்டி முடிந்திருந்தது. இன்று மத்தியம் வரை, அதாவது நாளின் முதல் பகுதி வரை நிப்டிக்கு 5336 புள்ளி அளவு நல்ல பாதுகாப்பு புள்ளியாக இருந்தது. நாளின் இரண்டாவது பகுதி முழுவதும் 5355 புள்ளி அளவு நல்ல பாதுகாப்பு புள்ளியாக இருந்தது. மேலும் 5375 புள்ளி அளவு வலுவான இடர் புள்ளி அளவாக இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் 233 .09 கோடிக்கு பங்குகள் வாங்கி இருந்தனர். உள்நாட்டு முதலிட்டாளர்கள் 66 .46 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர். நிபிட்டி 50 தில் உள்ள பங்குகளில், 33 பங்குகளின் விலை உயர்ந்தும் 16 பங்குகளின் விலை குறைந்தும் 1 பங்கின் விலை மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் முடிந்திருந்தது.
வருகைக்கு நன்றி!

No comments:

Post a Comment