Thursday, April 8, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
பங்குச்சந்தை இன்று சரிவுடன் முடிந்தது. மிக முக்கியமான பாதுகாப்புப் புள்ளிகளான 5355 மற்றும் 5327 ஆகிய புள்ளிகளை உடைத்து கீழிறங்கி முடிந்தது. மேலும் இந்த வாரத்தின் குறைந்த புள்ளியான 5291 அளவை தொட்டு சற்று முன்னேறி முடிந்தது. வர்த்தகத்தின் அளவு சுமாராக இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பங்குகள் வாங்கி இருந்தனர். அவர்கள் 62 .2 கோடிக்கு மட்டுமே வங்கி இருந்தனர். உள்நாட்டு முதலிட்டாளர்கள் 93 .62 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர்.
பங்குசந்தையின் நாளைய நிலவரம்

அந்நிய முதலிட்டாளர்கள் குறைந்த அளவு பங்குகள் வங்கி இருப்பதனால் நாளை நிபிட்டி குறுகிய அளவுக்குள்ளேயே வர்த்தகமாகும் என்று நினைக்கிறேன். நாளைய வர்த்தகத்திற்கு 5327 மற்றும் 5355 புள்ளிகள் இடர் புள்ளிகளாகவும், 5288 புள்ளி பாதுகாப்பு புள்ளியாகவும் இருக்கும். நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நிப்டியின் அளவு
5327 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5355 , இலக்கு 2 - 5375 , நஷ்டத் தடுப்பு -5301
5288 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5268 இலக்கு 2 -5245 , நஷ்டத் தடுப்பு 5301
வருகைக்கு நன்றி!

No comments:

Post a Comment