Tuesday, August 18, 2009

பெண் மனம் என்ன மனமோ?

"ஏய்..! ஏய்..! டேய் நில்லுடா ..!" என்று பதற்றத்துடன் ஓடினார்கள்.

" அந்த ஆளு ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டு இருக்கான் சார்" - என்றான் வாகனங்களுக்கு டோக்கன் தருபவன்.

ஏன் இந்த பரபரப்பு என்பது அந்தக் காட்சியைக் காணும் வரை விளங்கவில்லை.

நூலகக் கட்டிடத்தின் அருகில் தரையில் ஒரு பெண் மல்லாக்காய் படுத்திருந்தால் சற்றைக்கெல்லாம் எழுந்து அமர்ந்தாள். ஒருவன் அப்பெண்ணை நோக்கி விறுவிறுவென நடந்து வர , இரு கைகளையும் கூப்பி தலை குனிந்து எதோ சொல்லிக் கெஞ்சுகிறாள். வழியோடு போகிற ஒருவர் அவானை தடுத்து நிறுத்தினார்.

கணவன் மனைவி சண்டை . அடிப்பட்டு வலியின் கிறக்கத்தில்தான் அப்பெண் படுத்திருந்தாள் என்பது புரிந்தது. இருவரும் படித்தவர்கள், நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள் என்பதை தோற்றம் வெளிப்படுத்தியது.

இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதை உருவம் காட்டியது . பிரச்சைக்கு காரணம் சந்தேகமாக இருக்குமோ , குடி கெட சந்தேகம் ஒன்று போதுமே .

இரு கை கூப்பி ஏதோ சொல்லிக் கேஞ்சினாலே இதற்க்கு மேல் என்னால் தாங்க முடியாது அடிக்காதே என்றா ? இனி இந்த சித்திரவதையை என்னால் அனுபவிக்க முடியாது என்றா ?

தொடரும் ....

No comments:

Post a Comment