Thursday, August 20, 2009

4

"என்னய்யா ஒண்ணும்மில்ல.. வாய்யா ஸ்டேஷனுக்கு.. " என்று பலிக்கு இழுத்துச் செல்லும் ஆட்டைப்போல அவர்கள் இழக்க, இவன் வர மறுக்க, அவர்கள் அடிக்க, இவன் அலற,விதியின் விளையாட்டைப் பார்த்து வியந்தேன்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள் இங்கே மூன்று நிமிடத்துக்குள் விளைந்துவிட்டதே!

நீச்சல் தெரியாதவன் நீரில் முழ்கி தத்தளிப்பது போல தத்தளித்தான்.வாய் குழறியது. தேகந்தமும் நடுங்கியது, என் இப்படி மிரண்டு போகிறான்?

எல்லோரும் பார்க்கிறார்களே என்ற கூச்சமோ? பலர் முன் அடிபடுகிரோமே என்ற ச்ருமைய? காப்பாற்ற யாரும் இல்லையே என்ற ஏக்கமோ? திருப்பி அடிக்க முடியவில்லையே என்ற இயலாமையா? திருப்பி அடித்தால் கொன்றுவிடுவார்களோ என்ற பயமோ? இங்கேயே இப்படி அடிக்கிறார்களே ஸ்டேஷனுக்கு கொண்டு போய் என்ன செய்வார்களோ என்ற திகிலா?

எரியும் நெருப்பை அணைப்பதற்கு காய்ந்த கட்டைகளை அள்ளிப்போட்டது போல் தான் அவர்கள் அப்பெண்ணிற்கு செய்த உபகாரம். உதவி செய்ததால் அனுகூலத்தை விட பிரதிகூலம் தான் அதிகம்.

இன்று உன் முகத்தில் விழித்தால் தான் எனக்கு இந்த அவமானம் என்று உதைன்ப்பானோ? தெருவில் போறவனெல்லாம் என்னை அடிக்கும் படி செஞ்சிட்டியே என்று இடிப்பானோ? முன் பின் தெரியாதவனெல்லாம் என் சட்டையை பிடுச்சு கேள்வி கேக்கும் படி பண்ணிட்டியே என்று அடிப்பானோ? கையாலாகாதவனால் வேறு என்ன செய்ய முடியும்.

இந்த சம்பவத்தை அவன் மறக்கும் வரை அப்பெண்ணின் நிலையை நினைத்துப் பார்க்க மனம் பதைக்கிறது!

"டேய்..! ஸ்டேஷனுக்கு நடடா..!"

"சார்.. அவர விட்டிடுங்க.. ஐயோ..!" என்று விளையாடும் போது தடுக்கி விழுந்து தடுமாறும் குழந்தையை அள்ளி அனைத்துக் கொள்ள ஓடும் தாய் போல் ஓடினாள்.

முற்றும்.

No comments:

Post a Comment