Saturday, August 22, 2009

2
இவர்களின் கவனமும் ஓசை சென்ற திசையில் திரும்பியது. சுமித்ரா உட்பட அனைவரும் முகம் சுளித்தனர்.
"ச்சீ.. இவளெல்லாம் பொம்பளையா.. கொஞ்சமும் வெக்கம் இல்லாம இப்படி நாலு பேர் மத்தியில வராளே.. மானம் கெட்டவ..!"
"இவளால சன்னதித் தெருவுக்கே அவமானம்..இந்த மாதிரி பொம்மனாட்டிங்க உயிரோடவே இருக்கக் கூடாது.."
"அர்த்த ராத்திரியில எத்தன காரு.. எத்தன அட்டோ..ச்சீ..!" என்று சுமித்ரா நின்றிருந்த குழுவிலிருந்து தங்கள் வெறுப்பை வார்த்தைகளால் அள்ளி வீசினார்கள் .
பத்தடி துரத்தில் சாக்கடை இருந்தாலும் அதன் துர்நாற்றம் மனதில் உண்டுபண்ணும் அருவருப்பு உணர்வைப் போல பர்மாவின் இருப்பு அவள் மனதில் அருவருப்பு உணர்வை உண்டாக்கியது; அதை சகிக்க முடியாதவர்களாக முகத்தை சுளித்துக் கொண்டு மணி ஓசைக்காக காத்திருந்தனர்.
சன்னதித் தெருவில் 'அந்தத் தொழில்' செய்யும் இருபது பேர்களில் ஒருத்தி இந்த பத்மா.சற்றுத் தொலைவில் ஒரு குழந்தையை அழைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்."ஆண்டி இது..இது.." என்று, அவள் அழைத்து வந்த குழந்தை சுடிக்காட்டிய அந்த இளநீர் கடைக்கு சென்றாள். குழந்தைக்கு இளநீர் வாங்கிக்கொடுத்தாள். தன் ரவிக்கைக்குள் இருந்து பணம் எடுத்து கொடுத்தால். மரங்ககள், மேகங்கள், தெரு குப்பைத் தொட்டிகள் போன்ற கண்கள் இல்லாத உயிரினங்கள் மற்றும் பொருட்கள் மீது பார்வையைத் தவழவிட்டாள் பத்மா. ஆனால் பலரின் கண்களும் பத்மாவை மொய்த்தன.
"ஐயோ..! என்ற அலறல் சத்தம் அனைவரையும் தன் திசைக்கு திருப்பியது.
தொடரும்...

No comments:

Post a Comment