Wednesday, August 19, 2009

2
நான்கு சுவர்ர்களுக்குள் இருக்க வேண்டியதை நான்கு திக்குகளுக்கு மத்தியில் நடத்துகிறானே இவன் படித்தவனா?
தனக்கு நேர்ந்த சிறுமையை ninaithhtu நினைத்து அப்பெண் மனம் எப்படி குன்றியிருக்கும் . இம்சையின் நுகத்தடி அழுத்தி அழுத்தி நைந்த உள்ளம் என்பது முகத்தில் பிரதிபலித்தது !
பொறுமை குணம் இருப்பதால் அரற்றி ஆர்பாட்டம் செய்து அவனை அசிங்கப்படுத்தாமல் அடக்கமாக இருந்தாள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . பொறுமை தானே குடும்பப் பெண்ணின் லட்சணம் . இல்லாளுடைய நற்குண நற் செயல்களுமே இல்லத்துக்கு மங்களம் என்று கூறுவர் .
சிறிதும் முயற்சி செய்யாமல் அமிர்தம் தானே வந்து நம் மடியில் விழுந்து விட்டால் அது அல்பமாய் தான் தோன்றும் . இப்படி தப்பான எண்ணத்தை உண்டு பண்ணுவது மனத்தின் சுபாவம் .
தாமரையின் கிழங்கும் ,தவளையும் ஒரே இடத்தில் இருந்தும் அக்கிழன்கிலிருந்து உண்டாகும் தாமரைப்புவின் பறிமலத்தையும் தேனையும் அந்தத் தவளை அனுபவிக்காமல் சேற்றிலே கிடந்தது உழன்று கொண்டிருப்பது போல அப்பெண்ணின் நற்குணத்தை இவனால் உணர முடியவில்லை !

தொடரும்....

No comments:

Post a Comment