Thursday, May 20, 2010

யோசிக்க வைத்தவை

பெய்ய வேண்டிய நேரத்தில் நிறைவாக பெய்யிவதில்லை! கத்திரி வெயில், கன மழை பெய்து கொண்டிருக்கிறது. பலத்த காற்று வேறு. மழைக் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு! ஒரே நாளில் பருவகாலத்தையே மாற்றிக் காட்டிவிட்டதே இந்த இயற்கை!

இதோ இந்த மழை யாருக்கோ அதிர்ஷ்டமாகவும், யாருக்கோ துர்திர்ஷ்டமாகவும் நிச்சியம் அமைந்திருக்கும்.

எண்ணங்கள் செயல் வடிவம் பெற முயற்சி தேவை; திட்டமிட்ட படி அவை நிறைவேற தெய்வத்தின் அருள் தேவை. வெய்யிலை மனதில் வைத்துக் கொண்டு தங்கள் செயல்களை திட்டமிட்டவர்கள் நிலை என்னவாகும்?

"ச்சே...! இந்த மழை வந்து எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிடுச்சு....!" என்று சிலரும்,

"ஒருவேளை இந்த மழை வரலன்ன... இந்நேரம் இந்த வேலை முடிந்திருக்கும்... ப்ச்! போகட்டும் கடவுள் நமக்கு நல்லதை தான் செய்வார்... இதுவும் நல்லதுக்குத் தான்..." என்று சிலரும் நொந்து கொண்டிருப்பார்கள்.

இருவருமே மழையை நொந்து கொள்கிறார்கள்; ஆனால் விதம் வேறு.

ஆணவத்தோடும், அகங்காரத்தொடும், செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை தண்டனையாக அமைந்திருக்கும்; ஆண்டவன் ஆசியோடும், நல்ல எண்ணத்தோடும் செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை ஆசிர்வாதமாக அமைந்திருக்கும்.

நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு; அதை நமக்கு நன்மையாகவும் தீமையாகவும் அமைத்துக் கொள்வது, நம் கையில் தான் இருக்கிறது. 'நான்' என்ற அகங்காரத்தோடு வாழும் வரை, அது நமக்கு தீய சக்தி; அடக்கத்தோடும், அன்போடும் வாழும் வரை, அது நமக்கு நன்மை செய்யும் சக்தி.

நாம் நம் நிகழ் காலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுகிறோம்; நம் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நிகழ் காலத்தை அமைத்துக் கொடுக்கிறார் கடவுள். அகங்காரம் இருக்கும் வரை இந்த சூட்சமம் புரிவதில்லை. அகங்காரம் இருக்கும் வரை ஆசைகளுக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம்; ஆண்டவன் சிந்தனை இருக்கும் வரை கடமைக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம்.

என் சிறிய அறிவுக்கு வேண்டுமானால், இந்த மழை, காலம் தப்பி பெய்வதாக இருக்கலாம்; ஆனால் அந்தப் பேரறிவுக்கு இது முறையானதே!

No comments:

Post a Comment