Wednesday, May 12, 2010

விலாசம்

பச்சைப் புள்ளுண்டு வெள்ளைப் பால் தரும் பசுவே!

கலப்படப் பாலுண்டு கலந்த நீரைப் பிரிக்கும் அண்ணமே!

உப்பு நீருண்டு உண்ணும் நீர் தரும் மேகமே!

நெடுங்காலம் வாழ்ந்தும் நீர் மேல் நிலைத்து நிற்காத பாசியே!

இப் பதங்களை எங்கு கற்றீர்கள்?

மயக்க உணர்வால் மெய்ப் பொருள் உணராமல்

பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கும் நாங்களும்

அப் பதங்களைக் கற்று உய்ய

உங்கள் ஆசிரியர்களின் விலாசங்களைத் தாருங்களேன்!

No comments:

Post a Comment