Monday, March 29, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி 5300 அளவில் முடிவடைந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் சுமார் 1062 கோடிக்கு பங்குகள் வாங்கியிருந்தார்கள். இது பங்குசந்தைக்கு சாதகமான ஒன்று. வாரத்தின் முதல் நாளே அந்நிய முதலிட்டாளர்கள் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியிருப்பது, இந்த வாரம் பங்குச்சந்தை நல்ல ஏற்றம் பெரும் என்பதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இன்று நிபிட்டி வர்த்தக அளவு சுமாராகவே இருந்தது.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்

நாளை நிபிட்டி 5330 க்கு மேல் வர்த்தகமானால் நிச்சயம் ஏறுமுகமாக இருக்கும். நாளை பங்குசந்தைக்கு பாதகமான செய்தி ஏதும் இல்லைஎன்றால் ஒரு பெரிய ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். அந்நிய முதலிட்டாளர்கள் பெரும் தொகைக்கு வாங்கியிருப்பதால் நான் ஒரு ஏற்றத்தை எதிர்பார்க்கிறேன். நாளை நிபிட்டி 5383 5427 வரை செல்லும் என்பது என் கணிப்பு.
நன்றி!

No comments:

Post a Comment