Monday, December 3, 2018

முயற்சி

ஒன்று நினைத்து, உருட்டப்  பகடையை 
எண்ணிய படியே என்றும் விழாத 
தாயமாய், வாழ்விலும்  சற்றும் எண்ணா 
மாயங்  கள்பல வந்த வண்ணம் 
உள்ளதே ;  உள்ள  உளைச்சல் இல்லா 
உள்ளம் பெறவே, ஒருவழி உள்ளது.  
எதுவோ  நடக்குது,  எதற்கா கவோதான்  
அதுநடக் குதுமனம் அக்கணம்  நினைத்திடப்  
பழக்கம் செய்க; பலதடை வரட்டுமே  
விழவிடா துமனதை விடாது முயல்கவே 


No comments:

Post a Comment