Friday, November 23, 2018

பழக்கம்



பள்ளிச் செல்லும் பாலர் புரிதல்
வல்ல மைதான் வளரா ததாலே 
சொல்லி வைத்தனர்  சிறார்க்குப் பள்ளியில்
பல்தான் விழுந்தால் பள்ளம் தோண்டிப்
புதைத்திடு மீண்டும் புதுப்பல் முளைக்கவே
கதைதான் எதைதான் காக்கப் புனைந்தது
விழுங்கி விட்டால் விளையாட் டாய்பின்
எழும்தீ  மைகள் எண்ணிச்   சொன்னது
முழுதும் அறிந்த முன்னோர் மனிதர்
பழுதற வாழவே  பழக்கம் பலவே
செய்தனர் பழகியே சிறப்பாய் வாழ்வோம்
மெய்மை அறிவு விளையும் வரையே

No comments:

Post a Comment