Thursday, December 13, 2018

கண்ணாடி மானிடர்கள்



தன்முன்னால் வைத்தவற்றைத்  தன்னிலே காட்டிடும்  
கண்ணாடி போலவே   கண்ணாடி உள்ளமுள்ள
மானிடர்கள், நன்றாக வாழ்ந்தவர் இன்றைக்கு
மேனி இளைத்திருந்தால், மெச்சிமதிக் காதே; 
வறியவர்க்குத்  தக்க வரவேற்பே  நல்கும் 
எரியாதே நெஞ்சேநீ ஏதும் நிறுத்தாத
கண்ணாடி ஆகிவிடு கண்ணே! கடவுளே
துன்பத்தில் சாய்ந்திடும் தூண்!


No comments:

Post a Comment