Tuesday, October 30, 2018

திருத்தப்பட்ட பாடல்கள்


நான் எழுதிய பாடல்களை  "பைந்தமிழ்ச் சோலை" முகநூல் குழுவில் பதிவிட்டு, பிழையிருந்தால் திருத்துமாறு வேண்டிக்கொண்டேன்.

அதற்க்கேற்ப  "பைந்தமிழ்ச் சோலை" மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ஐயா அவர்களால் நிலைமண்டில ஆசிரியப் பாக்களாக  திருத்தப்பட்டன.

 நான் எழுதியதையும் அவர், திருத்தியதையும் பதிவிடுகிறேன்.

இறை வணக்கம்

மனித வாழ்க்கை வரைபடம் உன்னிடம்,
இனி வருவது யாதென அறிந்திடும்
தெளிவே, ஏதும் தெரியா தவன்
தெளிவாய் சிறப்பாய் செயல்பட அருள்வாய்

திருத்தப்பட்ட பாடல்
இறை வணக்கம்
* * * * * * * ** * * *
மனித வாழ்க்கை வரைபடம் உன்னிடம்,
இனிமேல் வருவது யாதென அறிந்திடும்
தெளிவே, ஏதும் தெரியா தவனைத்
தெளிவாய்ச் சிறப்பாய்ச் செயல்பட அருள்கவே!


 எட்டுநடைப் பயிற்சி
மருந்து பாதி மளிகைப் பாதி
வருந்தி வாங்கும் மனித குலமே
மீளும் வழியும் விளங்கும் செய்தால்
நாளும் எட்டு நடைப் பயிற்சி

திருத்தப்பட்ட பாடல்
எட்டுநடைப் பயிற்சி
* * * * * * * * * * * * * *
மருந்து பாதி மாளிகைப் பாதி
வருந்தி வாங்கும் மனிதக் குலமே
மீளும் வழியும் விளங்கும் செய்க
நாளும் எட்டு நன்னடைப் பயிற்சியே!


மழை
மங்கை யிடம் வயதைக் கேட்டதும்
பொங் கிடும் பொல்லா தகோவம்
போல் மழை பொழிந்தது; திட்டு
போல் முட்டியது பூமியை துளி

திருத்தப்பட்ட பாடல்
மழை
* * * *
மங்கை யிடத்தே வயதைக் கேட்டதும்
பொங்கிய தாலே பொல்லாக் கோவம்
போல்மழை பொங்கிப் பொழிந்தது; திட்டு
போல்முட் டியதே பூமியை துளியே!








No comments:

Post a Comment