Tuesday, September 17, 2019

தெய்வம்


நாளை என்ன நடக்கு மென்று
காலை பொழுதே  காண்பா ரில்லை
நேற்று நடந்த நிகழ்வை  தெளிவாய்
வேற்றுமை  யின்றி விளம்புவா ரில்லை
செய்த  செயலின் தீர்ப்பே பலன்கள்
செயல்பலன் தொடர்பு தெரியா அறிவில்
செய்த  திட்டம்  சிதறும் போது
தெய்வம் நம்பி திடமாய் முயல்க
திருத்தம் செய்து சிறப்பாய் அமைத்து
கருத்தாய் காக்கும் கவலை விடுக
இன்றே  நாளை எட்டிப் பார்த்து
என்ன நன்மை என்ன தீமை
நேரு மென்று  நெஞ்சம் சொன்னால்
யாரும் தெய்வம்  என்றே எண்ணார்.

No comments:

Post a Comment