Friday, February 18, 2011

சின்னச் சின்னச் சூரியர்களே..!




செடிகளே, கொடிகளே, தருக்களே,
என் மீது விழும் சூர்யக்கதிர்களை
உணவாக்கும் ஆற்றல் இல்லையே..!
அளவு சிறியதானாலும்
அந்த அருகம் புல்லின் கம்பிரம் உயர்ந்தது..!
உணவு தேடும் தேவை இல்லாததால் தான் நீங்கள் நகர்வதில்லையோ..!
சொந்தக் காலில் நிறபது என்பது இதுதானோ..!
சக்திக்காக சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் போல,
மனிதர்களும், மிருகங்க்ளும், மனிதமிருகங்களும்,
சுற்றி வரும் சின்னச் சின்னச் சூரியர்களே...
"கொன்றால் பாவம் திண்றால் போச்சு.." என்னும்
சித்தாந்தம்
"நட்டுவிட்டு வெட்டு.." என்று மாறும் காலம் எப்போது..?

No comments:

Post a Comment