Wednesday, October 21, 2020

இறை வணக்கம்

மிச்சம் வைத்த வேண்டுதல் முடிக்க

உச்சி வெயிலில் ஒதுங்க நிழலில்

கருங்கல் தரையில் கடவுள் மனையில்

திருவைக் காண திருப்பணி முடிக்க

உள்ளங் காலுடன் உள்ளமும்  தவிக்க

அல்லள் முடியும் அவ்வே ளைபார்த்து

ஏங்கும் மனநிலை இத்துயர் தந்தது

தாங்கும் திடமனம் தருவாய் திருவே..


No comments:

Post a Comment