Saturday, August 10, 2019

"தெய்வ நம்பிக்கை".


எதிர்பாரா சூழல், எதிர்காலம் தாங்கும்
புதிர்விடை; யார்க்கு புதிர்பின் விடைமுன்.
நிகழ்பவை யாவுமே நேற்று நிகழ்வின்
தகவல் சுமந்திருக்கும், தப்பினால் நாளை
நிகழ்வின் அறிகுறி; நீயே கதியென
தெய்வ நினைவில் செயல்படும் யாவரும்
செய்யும் செயல்கள் திருத்தமாய் செய்ய
உணர்வால் உணர்த்துவார் உள்நின்று காக்கும்
உணர்வு மொழியில் உரையாடும் அப்பன்.
திடமாக நம்பினால், தெய்வ மடியில்
கிடக்கும் மழலை வாழ்வு.

No comments:

Post a Comment