Saturday, December 10, 2011

ஆசை ஒப்பனைக் கலைஞன்.

ஆசை ஒப்பனைக் கலைஞன்.
ஒருவரைப் பிடித்துவிட்டால்,
மனதுக்கு,
அவரின் குறை கூட நிலவு கரை.
பிடிக்காவிட்டால்,
குணம் கூட குறை.
பலன் கருதா பாசம்
நிஜ முகம்.
பலன் கருதும் பாசம்
ஒப்பனை முகம்.
வண்ணப் பொடிகளின்
பெட்டி மனம்;
ஆசை ஒப்பனைக் கலைஞன்;
சருகையும், இலையாகக் காட்டும் ஆற்றல்.
ஆசையின் ஆட்சி அடிதளத்தில்,
அறிவு அங்கே அடிமை.
மத யானைக்கு அங்குசமா..?
ஆசை ஒப்பனைக் கலைஞன்.

2 comments:

  1. //வண்ணப் பொடிகளின்

    பெட்டி மனம்;//ஆழ்ந்த சிந்தனை மிகுந்த வரிகள். மிக அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  2. திரு வே.சுப்ரமணியன். பாராட்ட எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு நன்றி..! ரசித்ததிற்கு மனமார்ந்த நன்றி. தங்களின் வருகை எனக்கு ஊக்கம் அளிக்கிறது..!
    நன்றி.

    ReplyDelete