Wednesday, March 17, 2021

தெய்வம்

நாளை என்ன நடக்குமென்று 

காலை பொழுதே  காண்பா ரில்லை

நேற்று நடந்த நிகழ்வை  தெளிவாய்

வேற்றுமை  யின்றி விளம்புவா ரில்லை

செய்த  செயலின் தீர்ப்பே பலன்கள்

செயல்பலன் தொடர்பு தெரியா அறிவில்

செய்த  திட்டம்  சிதறும் போது

தெய்வம் நம்பி திடமாய் முயல்க

திருத்தம் செய்து சிறப்பாய் அமைத்து 

கருத்தாய் காக்கும் கவலை விடுக

இன்றே  நாளை எட்டிப் பார்த்து

என்ன நன்மை என்ன தீமை

நேரு மென்று  நெஞ்சம் சொன்னால்

யாரும் தெய்வம்  என்றே எண்ணார்.


No comments:

Post a Comment