Tuesday, April 6, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று முழுவது நிபிட்டி, உயர்ந்த போதும், கீழ் இறங்கிய போதும், உடனடியாக 5368 அளவை அடைந்துவிட்டது. 5383 அளவை கடக்க மிகவும் தடுமாறியது; அதே போல் 5355 அளவையும் அது உடைத்து கீழ் இறங்கவும் இல்லை; 5355 நல்ல தடுப்பாகவும் இருந்தது. முந்தய ஆறு வர்த்தக தினங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று வர்த்தகத்தின் அளவு உயர்ந்திருந்தது. ஆனால் நிபிட்டி மிகச் சிறிய சரிவோடு தான் முடிந்தது. இது நல்ல விஷயம் அல்ல. ஒரு வேலை வர்த்தகர்கள் பங்குகளை விற்று லாபம் எடுத்திருக்கலாம்! விலை வரைப் படத்தில் உயர்வை தடுக்கின்ற அறிகுறி தென்படுகிறது. இருந்த போதிலும் நிபிட்டி இன்னமும் 20 மற்றும் 50 EMA விற்கு மேல் தான் உள்ளது. அந்நிய முதலிட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலிட்டாளர்கள் இருவருமே மிகக் குறைந்த அளவிலேயே பங்குகள் வாங்கியிருந்தனர். இது பங்குசந்தைக்கு பாதகமான அம்சம். அந்நிய முதலிட்டாளர்கள் 261 .7 கோடியும், உள்நாட்டு முதலிட்டாளர்கள் 81 கோடியும் வாங்கியிருந்தனர்.இதற்கு முன் அவர்கள் வாங்கிய பங்குகளின் அளவி விட இது குறைந்த அளவே! இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


பங்குச்சந்தை நாளைய நிலவரம்
அந்நிய முதலிட்டாளர்களின் பங்குகள் வாங்கிய அளவு குறைந்திருப்பதால், என் கணிப்பில், நிபிட்டி ஒவ்வொரு உயர்விலும் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டும்.நாளைய வர்த்தகத்திற்கு 5383 மற்றும் 5355 அளவுகளை கவனிக்க வேண்டும். என் அறிவுக்கு எட்டிய வரை, பணம் சார்ந்த கொள்கை மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர இருப்பதால், நாளை நிப்டியில் வர்த்தகம் குறுகிய அளவுக்குள் தான் நடைபெறும் என்று எதிர்பார்கிறேன். நான் கேள்விப்பட்டவரை, ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால், இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே நிபிட்டி உயரும் போது மிகுந்த கவனத்தோடு வர்த்தகம் செய்வது நன்று.
நிப்டியின் அளவு
5383 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5427 , இலக்கு 2 - 5463 , இலக்கு 3 - 5483 நஷ்டத் தடுப்பு - 5368
5355 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5301 , இலக்கு 2 - 5280 , இலக்கு 3 - 5245 , நஷ்டத் தடுப்பு - 5368 .
வருகைக்கு நன்றி!

No comments:

Post a Comment